என்.ஆர்.சி... அமித்ஷா கருத்துக்கு பிரதமர் மோடி மறுப்பு- நாடு முழுவதும் அமல் இல்லை!
டெல்லி: நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை (என்.ஆர்.சி) செயல்படுத்தப்போவது இல்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை செயல்படுத்தப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்நிலையில் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையும் அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் நாடு முழுவதும் என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் என்.ஆர்.சியை ஏற்க முடியாது என மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் என்.ஆர்.சியை நடைமுறைப்படுத்துவது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவே இல்லை. அஸ்ஸாமில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால்தான் செயல்படுத்தினோம் என கூறியுள்ளார்.
மேலும் என்.ஆர்.சி.யை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்திலோ, அமைச்சரவையிலோ ஆலோசிக்கப்படவில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடியின் இக்கருத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுவரை தெரிவித்த கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிப்பதாக உள்ளது.
சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் அடையாளம் காண்போம்; இதற்காகவே நாடு முழுவதும் என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும் என அமித்ஷா கூறியிருந்தார். லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது கூட, நாடு முழுவதும் என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும் என திட்டவட்டமாக அமித்ஷா கூறியிருந்தார்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலின் போதும் அமித்ஷா இதனை வலியுறுத்தி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications