பாஜக அழைத்ததால் டெல்லி சென்ற ஓ பன்னீர் செல்வம்.. விமானத்தில் சென்னை திரும்பினார்.. பேட்டி தர மறுப்பு
டெல்லி: டெல்லியில் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனுத்தாக்கல் நிகழ்வில் பங்கேற்ற ஓ பன்னீர்செல்வம் இன்று விமானத்தில் சென்னை திரும்பிய நிலையில் பேட்டி தர மறுத்துவிட்டார்.
Recommended Video
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18 ல் நடைபெற உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் முடிவு ஜூலை 21ல் அறிவிக்கப்பட உள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் நிகழ்வில் ஓபிஎஸ்
இந்நிலையில் டெல்லியில் நேற்று திரெளபதி முர்மு வேட்புமனுத்தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், அவரது மகனும் எம்பியுமான ரவீந்திரநாத் பங்கேற்றனர்.

முழு ஆதரவு உண்டு
முன்னதாக இந்த நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பொதுக்குழு முடிந்த நிலையில் அன்று இரவு ஓ பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்றைய வேட்புமனுத்தாக்கலுக்கு பிறகு திரொளபதி முர்மு ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரினார். இதுபற்றி பன்னீ்ர்செல்வம் கூறுகையில், ‛‛ஜனாதிபதி தேர்தலில் அதிமுக சார்பில் திரௌபதி முர்முவுக்கு மனப்பூர்வமாக ஆதரவு உண்டு'' என்றார்.

சென்னை திரும்பிய ஓ பன்னீர்செல்வம்
இந்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் சில தலைவர்களை சந்தித்து கட்சியின் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பேசி தனக்கான செல்வாக்கை நிலைநிறுத்த உதவி கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி சென்ற ஓ பன்னீர் செல்வம் இன்று மாலை விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு பேட்டி காண முயன்றனர். ஆனால் அவர் காரில் ஏரி பேட்டி கொடுக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பொதுக்குழு பிரச்சனையை ஆலோசனை
மேலும் அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தலைத்தூக்கி உள்ளது. இந்த பிரச்சனை நேற்று முன்தினம் நடந்த அதிமுக பொதுக்குழுவிலும் எதிரொலித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் ஓ பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு அவர் அவமானப்படுத்தப்பட்டார். இந்நிலையில் தான் அவர் டெல்லி சென்றார். இந்நிலையில் ஓ பன்னீர் செல்வம் டெல்லியில் பாஜகவின் சில முக்கிய தலைவர்களை சந்தித்து கட்சி விவகாரம் குறித்து பேசியுள்ளார். மேலும் கட்சியில் தான் ஓரங்கட்டப்படும் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications