2020 ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையை தேர்வு செய்த ஆக்ஸ்போர்டு.. மோடி அதிகம் பயன்படுத்திய வார்த்தை
டெல்லி: 2020ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையாக பிரதமர் மோடி பயன்படுத்திய ஆத்ம நிர்பார் பாரத் என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உலகப் பொருளாதாரமே முடங்கும் நிலை ஏற்பட்டது.

20 லட்சம் கோடி ரூபாய்
பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்த திட்டத்திற்கு ஆத்மநிர்பார் பாரத் என பெயரிடப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி பெயர் வைத்தார்.

இந்தி
அதாவது தற்சார்பு இந்தியா என்பதுதான் இந்தியில் ஆத்மநிர்பார் பாரத் ஆகும். இந்த நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையாக ஆத்மநிர்பார் பாரத்தை ஆக்ஸ்போர்டு நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. மொழி வல்லுநர்களின் ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த கிரித்திகா அகர்வால், பூனம் நிகம் சாஹே இமோகென் ஃபோக்ஸெல் தேர்வு செய்துள்ளனர்.

அவசியம்
இது தொடர்பாக ஆக்ஸ்போர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பாதிப்பு தொடங்கிய நேரத்தில் கொரோனா பாதிப்பு நிதி திட்டத்தை அறிவிக்கும் போது பிரதமர் மோடி ஒரு நாடு பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக தனிநபராக தற்சார்பு நிலையை அடைய வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.

பிரச்சாரம்
பிரதமர் மோடியின் உரையில் ஆத்மநிர்பார் பாரத் என்ற வார்த்தையின் பயன்பாடு அதிகமாகவே இருந்தது. ஆத்மநிர்பார் பாரத் பிரச்சாரத்தின் வெற்றியின் அடையாளமாக இந்தியாவின் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து அதிக அளவில் தயாரிக்கப்படுவது முன்னுதாரணமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications