ஓய்வூதியதாரர்கள் கவனத்துக்கு.. ஆன்லைனிலேயே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் - எளிமையான வழிமுறை
டெல்லி: ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை (Life Certificate) ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்க எளிமையான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் நேரில் சென்றுதான் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இனி ஓய்வூதியதாரர்களுக்கு இல்லை.
வயதான காலத்தில் முதியவர்களுக்கு தேவையில்லாத அலைச்சலை தவிர்ப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

மோசடிகளை தடுக்கும் வாழ்நாள் சான்றிதழ்..
இந்தியாவில் கிட்டத்தட்ட 1 கோடிக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியத்துக்காகவே மத்திய, மாநில பட்ஜெட்டுகளில் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அதாவது, தாங்கள் உயிருடன்தான் இருக்கிறோம் என்பதை அரசுக்கு தெரியப்படுவத்தவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. மோசடிகளை தடுப்பதற்காகவும் இந்த நடைமுறை அமலில் உள்ளது.

ஓய்வூதியதாரர்கள் சிரமம்..
இதன்படி வங்கிகள், தபால் அலுவலகங்கள், மாநில அல்லது யூனியன் பிரதேச அரசு அலுவலகங்கள் என இவற்றில் ஏதாவது ஒரு அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டோர் அக்டோபர் 1 முதல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, வயது முதிர்வு காரணமாக பல ஓய்வூதியதாரர்கள் இவ்வாறு நேரடியாக அலுவலகத்துக்கு வந்து செல்வது அவர்களுக்கு கடினமாக இருப்பதாக புகார்கள் எழுந்து வந்தன.

வந்துவிட்டது ஆன்லைன் வழிமுறை
இதனைக் கருத்தில்கொண்டு, ஆன்லைன் மூலமாக ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 'ஜீவன் பிரமான்' (Jeevan Pramaan) என்ற போர்ட்டல் அறிமுகப்பட்டுள்ளது. இதற்கு, ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆன்ட்ராய்டு போனில் 'Jeevan Pramaan' செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். அதன் பின்னர், ஓய்வூதியதாரரை புகைப்படம் எடுத்து அதனை அந்த போர்ட்டலில் அப்லோடு செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து, அதில் இருக்கும் விவரங்களை பூர்த்தி செய்தாலே வாழ்நாள் சான்றிழல் ரெடியாகிவிடும். அதை அப்படியே அனுப்பினால் போதுமானது.

வீட்டுக்கு வந்து வாங்கிச் செல்வார்கள்..
மேற்கூறிய ஆன்லைன் நடைமுறை மிக மிக எளிமையானது. ஆனால், ஆன்லைன் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது எனக் கூறுபவர்களுக்கு அதற்கு மாற்றான வழிமுறைகள் இருக்கின்றன. அதன்படி, அவர்கள் தங்கள் ஆன்ட்ராய்டு போனில் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று 'Postinfo' என்ற செயலியை டவுன்லோடு செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பினால் மட்டும் போதுமானது. தபால்காரர்கள் வீட்டுக்கே வந்து வாழ்நாள் சான்றிதழை அவர்களே தயார் செய்து வாங்கிச் சென்றுவிடுவார்கள். இல்லையெனில், கூகுள் ப்ளேஸ்டோரில் 'Doorstep Banking' என்ற செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். அப்படி செய்தால், வங்கி ஊழியர்கள் வீட்டுக்கே வந்து வாழ்நாள் சான்றிதழை தயார் செய்து வாங்கிக் கொள்வார்கள்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications