ஜம்மு காஷ்மீரின் ரஜவுரியில்... ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி..!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜவுரியில் ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி.
கடந்த 2014 முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது பிரதமர் மோடியின் வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் ராணுவ வீரர்களுடன் இணைந்து பண்டிகையை கொண்டாடுகிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி ரஜவுரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் படைவீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி அங்கு தீபம் ஏற்றினார்.

ஜம்மு காஷ்மீரின் பூன்ச் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்து வரும் சூழலில், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இந்தாண்டு தீபாவாளி கொண்டாடுவரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் அவர் இன்று ஜம்முவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடியின் வருகை ராணுவத்தினருக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் எந்த அச்சுறுத்தல்களுக்கும் இந்தியா அஞ்சாது என்பதை உலகிற்கு பறைசாற்றும் நிகழ்வாக அமையும் என ராணுவ முத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே நாட்டு மக்களுக்கு தீபாவாளி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் தர வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications