ஏழைகள் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.. பிரதமர் மோடி புகழாரம்!!!
டெல்லி: எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எம்ஜிஆரின் ரசிகர்கள், அதிமுக கட்சி தொண்டர்கள் என பலர் எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
ஆங்காங்கே எம்ஜிஆரின் திருவுருவப்படங்களை வைத்து மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி அவரது திரைப்படத்தில் இடம்பெற்ற கருத்துள்ள பாடல்களை ஒலிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் எம்ஜிஆரின் பிறந்தநாளன்று பிரதமர் மோடியும் அவரது நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன என பாராட்டியுள்ளார்.
எம்ஜிஆர் ஜனவரி 17ஆம் தேதி 1917 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அரசியல் பணி செய்து வந்தார். இந்த நிலையில் அண்ணா மறைந்த பிறகு திமுகவில் கருணாநிதியுடன் மோதல் ஏற்பட்டு திமுகவிலிருந்து விலகி அண்ணா திமுக என்ற புதிய கட்சியை 1972 ஆம் ஆண்டு தொடங்கினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications