பாஜக புதிய வரலாற்றை படைத்திருக்கிறது - தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
டெல்லி: மக்களுக்கு பாஜக மீதான அன்பை வலுப்படுத்தியுள்ளனர் என ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி தொண்டர்களிடையே உரையாற்றியுள்ளார்.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியனது. இதில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்டில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. கோவாவில் சுயேட்சை ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக.

பாஜக வெற்றி
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதுவரை உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளில் 274 தொகுதியிலும், மணிப்பூரில் 60 தொகுதியில் 31 இடத்திலும், உத்தரகாண்டில் 70 தொகுதியில் 48 இடத்திலும், கோவாவில் 40 தொகுதியில் 20 இடத்திலும் முன்னிலையில் இருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது.

பிரதமர் மோடி
பாஜகவின் இந்த இமாலய வெற்றியை அடுத்து, பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். டெல்லி பாஜக தலைமையகத்தில் நடந்த வெற்றி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று தொண்டர்களிடம் பேசினார். அப்போது, ''இது மகிழ்ச்சியான நாள், இது திருவிழா, இந்திய ஜனநாயகத்துக்கான திருவிழா. தேர்தலில் வாக்களித்த அத்தனை பேருக்கும் என்னுடய நன்றிகள். பெண்களும், சகோதரிகளும், இளைஞர்களும் முழு மனதோடு பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள்.

முதல்முறை வாக்காளர்கள்
இந்த தேர்தலில் முதல்முறை வாக்களித்த இளைஞர்கள் மன மகிழ்ச்சியோடு பாஜகவுக்கு வாக்களித்தார்கள். மார்ச் 10ம் தேதியில் இருந்தே இந்த ஆண்டு ஹோலி தொடங்கும் என பாஜக செயல்வீரர்கள் எனக்கு உறுதியளித்தார்கள். அவர்கள் சொன்னதை நிரூபித்தார்கள். அவர்களுக்கு என்னுடய நன்றிகள். இரவு பகலாக உழைத்து இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் தான் மக்கள் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள்.

மக்களின் அன்பு
தேர்தல் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல, அது வேதியியல். இந்தியாவின் ஏழை மற்றும் ஏழை மக்கள், பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைவரும் பாஜக மற்றும் தன்னுடன் தங்கள் அன்பை வலுப்படுத்தி வருகின்றனர்.
இது பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசத்தில் இந்த தேர்தலில் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

புதிய வரலாறு
கோவாவில் அனைத்து கருத்துக் கணிப்புகளும் தவறு என நிரூபணமாகியுள்ளது. உத்தரகாண்டில் பாஜக புதிய வரலாற்றை எழுதியுள்ளது- முதல்முறையாக ஒரு கட்சி மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. அதேபோல், உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார் யோகி ஆதித்யநாத். மீண்டும் அங்கும் ஆட்சியைப் பிடித்திருக்கிறோம்.

நம்பிக்கை
எங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம் தான் இந்த தேர்தல் முடிவு. மக்கள் எங்கள் ஆட்சிக்கு கொடுத்த சான்று தான் இந்த வெற்றி. கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அரசின் திட்டம் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. அதை நிறைவேற்றி இருக்கிறோம். அடிப்படை தேவைகளை மக்களுக்கு செய்து கொடுத்திருக்கிறோம்.
-
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications