Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுழன்றடிக்கும் சர்ச்சை! தீவிரமாகும் போராட்டங்கள்! என்ன செய்யலாம்? நாளை பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : அக்னிபத் திட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் கடும் சர்ச்சைகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி நாளை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஆயுதப்படையை பலப்படுத்துவதன் ஒரு பகுதியாக, முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய 'அக்னிபத்' ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், ஹரியானா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் போராட்டம் தீவிரமடைந்ததால், போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீ வைத்தனதோடும் சாலையில் சென்ற வாகனங்களை எரித்து, தனியார் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தினர்.

தீவிரமடையும் போராட்டம்

தீவிரமடையும் போராட்டம்

நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போராட்டங்களால் நாட்டின் பல பகுதிகளில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 491 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து மத்திய அரசு சார்பில் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் போராட்டக்காரர்கள் அதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

ஆட்சேர்ப்பு நடவடிக்கை

ஆட்சேர்ப்பு நடவடிக்கை

ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல 4 ஆண்டுகளுக்கு மட்டும் இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் இணையும் அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படை மற்றும் கப்பல் படையில் இணைவதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தற்போது சேர்க்கை முதல், சீருடை, ஊதியம், இன்ஸ்சூரன்ஸ், விடுமுறை ஆகிய தகவல்களுடன் 29 வகையான விளக்கங்கள் மற்றும் விதிமுறைகள் இந்த பட்டியலில் உள்ளன. ஏற்கனவே அக்னிபாத் திட்டம் விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தற்போது ஆட்சேர்ப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதால் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

பிரதமர் ஆலோசனை

பிரதமர் ஆலோசனை

இந்நிலையில் அக்னிபத் திட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் கடும் சர்ச்சைகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி நாளை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, முப்படைகள் தலைவர்களும் தனித்தனியாக பிரதமரைச் சந்தித்து, அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டம் குறித்து அவரிடம் விவரிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+