இந்தியாவில் மத சுதந்திரம் மிக மோசம்.. அமெரிக்க மத சுதந்திர ஆணையம் மீண்டும் குற்றச்சாட்டு
டெல்லி: இந்தியாவில் மத சுதந்திரம் என்பது மிக மோசமாக உள்ளது என அமெரிக்காவின் மத சுதந்திரம் தொடர்பான ஆணையம் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
U.S. COMMISSION ON INTERNATIONAL RELIGIOUS FREEDOM என்கிற ஆணையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:

ஊபா சட்டம் ஏவல்
2021-ம் ஆண்டில் இந்தியாவில் மதசுதந்திரம் என்பது மிக மோசமானதாக இருந்தது. மத்தியில் ஆளும் அரசு இந்துத்துவா கொள்கையை செயல்படுத்த முனைந்ததால் முஸ்லிம்கள்,தலித்துகள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட பிரிவினரிடையே எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது. 2021-ம் ஆண்டில் மத சிறுபான்மையினர் மற்றும் மதசிறுபான்மையினருக்கான ஆதரவு குரல்களை இந்திய அரசு ஒடுக்கியது. ஊபா உள்ளிட்ட சட்டங்களை ஏவி விட்டது மத்திய அரசு.

ஸ்டேன் சுவாமி மரணம்
ஆதிவாசிகள், தலித்துகள் மேம்பாட்டுக்காக பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் சிறையிலேயே 2021-ல் மரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்த முஸ்லிம் மனித உரிமை வழக்கறிஞர் குரம் பர்வேஸ் உள்ளிட்ட பலர் ஒடுக்குமுறைக்குள்ளாகினர். ஆதிவாசிகள், தலித்துகள் மேம்பாட்டுக்காக பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி ஊபா சட்டத்தின் கைது செய்யப்பட்டார். அவர் சிறையிலேயே 2021-ல் மரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்த முஸ்லிம் மனித உரிமை வழக்கறிஞர் குரம் பர்வேஸ் உள்ளிட்ட பலர் ஒடுக்குமுறைக்குள்ளாகினர்.

சிறுபான்மையினர் மீது ஒடுக்குமுறை
திரிபுராவில் மசூதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து ட்விட்டர் பதிவிட்டவர்கள் மீது கூட ஊபா சட்டங்கள் பாய்ந்துள்ளன. இந்தியாவில் ஊபா சட்டம் ஏவிவிடப்பட்டிருப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்திருந்தது. எப்.சி.ஆர்.ஏ சட்டத்தின் கீழ் தன்னார்வ நிறுவனங்களை ஒடுக்கி வருகிறது மத்திய பாஜக அரசு. ஆக்ஸ்பாம் உள்ளிட்ட 6,000-க்கும் அதிகமான தன்னார்வ நிறுவனங்களின் உரிமங்களை இந்திய அரசு இந்த பிரிவின் கீழ் புதுப்பிக்காமல் இருந்து வருகிறது.

இந்தியாவுக்கு அறிவுரை
மதமாற்ற தடுப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கர்நாடகத்தில் மதமாற்ற தடுப்பு நடவடிக்கைகளின் பெயரால் கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மதமாற்றத்தில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதசுதந்திர பாதுகாப்பு தொடர்பாக இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளையும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ளது.
-
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications