Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்.. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகானை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மரணமடைந்த நிலையில் அவரது இடத்துக்கு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கப்பற்படைக்கு தனித்தனியே தளபதிகள் உள்ளனர். இந்நிலையில் முப்படைகளையும் இணைத்து ராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் முப்படை தலைமை தளபதி பொறுப்பு உருவாக்கப்பட்டது.

இந்த பொறுப்பில் முதன் முதலாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார். இவர் 2019 டிசம்பர் 31 முதல் மூன்றாண்டுகள் வரை தொடர்ந்து பணி செய்து வந்தார்.

பிபின் ராவத் மரணம்

பிபின் ராவத் மரணம்

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ல் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் இறந்தார். இதையடுத்து இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பதவி காலியாக இருந்தது. இருப்பினும் அந்த பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பது பற்றி மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.

அனில் சவுகான் நியமனம்

அனில் சவுகான் நியமனம்

அந்த வகையில் தற்போது முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் தலைமை தளபதி அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவர் மத்திய அரசின் ராணுவ விவகாரத் துறை செயலாளராகவும் பணியாற்றுவார் என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2வது நபராக நியமனம்

2வது நபராக நியமனம்

இந்த பொறுப்பில் உள்ளவர் முப்படைகளை ஒருங்கிணைத்து செயல்படுவார். நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு இவருக்கு உள்ளது. இதனால் தான் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். இந்தியாவில் முதன் முதலாக பிபின் ராவத் முப்படைகளில் தலைமை தளபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2வது நபராக அனில் சவுகான் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விதிகளில் திருத்தம்

விதிகளில் திருத்தம்

முன்னதாக முப்படை தலைமை தளபதி நியமனத்துக்கான விதியில் சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 62 வயது நிரம்பிய ஓய்வு அல்லது பணியில் உள்ள லெப்டினென்ட் ஜெனரல், ஏர் மார்ஷல், துணை அட்மிரல்கள் மட்டுமே முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்க தகுதி உடையவர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 3 ஸ்டார், 4 ஸ்டார் கொண்ட அதிகாரிகளும் தகுதி படைத்தவர்களாக உள்ளனர். இதில் லெப்டினென்ட் ஜெனராலாக கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற அனில் சவுகான் தற்போது முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+