உக்ரைன் போர் எதிரொலி! 2022 கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து ரஷ்யா நீக்கம்! FIFA அதிரடி
டெல்லி: உக்ரைன் போர் தொடரும் நிலையில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த வியாழக்கிழமை ரஷ்யா ராணுவம் போரை ஆரம்பித்தது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த முழு வீச்சிலான ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது.
முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம், அதன் பின்னர் தரைவழி தாக்குதலையும் தொடங்கியது. தலைநகர் கீவ் தொடங்கிப் பல நகரங்களில் போர் நடைபெற்றது.

உக்ரைன் போர்
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை உலகின் பல்வேறு நாடுகளையும் ஆத்திரப்படுத்தியது. ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவும் பிரிட்டனும் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் அதிபர் புதின் சொத்துகளை முடக்க ஒப்புதல் அளித்தது.

ரஷ்யா நீக்கம்
அரசியல் ரீதியாக மட்டுமின்றி, விளையாட்டுத் துறையிலும் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை விளையாட்டு அமைப்புகள் எடுத்து வருகின்றன. ஏற்கனவே ரஷ்யாவில் நடைபெற இருந்த ஃபார்முலா ஒன் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இதனிடையே 2022 கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து ரஷ்யா நீக்கப்படுவதாகச் சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிபா அறிவித்துள்ளது.

2022 கத்தார் உலகக் கோப்பை
மேலும், ரஷ்ய அணிகள் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து சர்வதேச கால்பந்து தொடர்களில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஃபிபா தற்போது அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை தகுதிச் சுற்று பிளே-ஆஃப்களில் ரஷ்ய ஆண்கள் அணி விளையாட இருந்தது, அதேபோல ரஷ்யப் பெண்கள் அணியும் இங்கிலாந்தில் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கிளப் அணிகள்
ஃபிபா அமைப்பின் இந்த அறிவிப்பு ஐரோப்பியப் போட்டிகளில் பங்கேற்கும் ரஷ்ய கிளப்புகளையும் பாதிக்கும். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "தேசிய அணிகள் அல்லது கிளப் அணிகள் என அனைத்து ரஷ்ய அணிகளும், மறு அறிவிப்பு வரும் வரை FIFA மற்றும் UEFA போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறது. உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் ஆதரவாக உள்ளோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications