வரும் 26-இல் அபூர்வ சூரிய கிரகணம்.. இப்ப மிஸ் செய்தீங்கன்னா.. அதோட 2031-இல்தான்! பாத்துக்கோங்க!
டெல்லி: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அபூர்வ சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும். வரும் 26-ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும் போது அதன் நிழலால் சூரியனின் ஒரு பகுதி மறைக்கப்படும். இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இதுவே சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம்.
சூரியனின் மையப்பகுதியை மட்டும் நிலவு மறைத்து விளிம்பில் வளையம் போல் ஒளி தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் ஆகும். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும். இந்த வளைய சூரிய கிரகணம் வரும் 26-ஆம் தேதி நிகழ்கிறது.

கர்நாடகம்
இந்தியாவில் தமிழகத்திலும் கர்நாடக மாநிலத்தின் தென் பகுதி, கேரளாவின் வடபகுதியில் இந்த கிரகணத்தை காணலாம். கர்நாடகம், கேரளத்தை விட தமிழகத்தில்தான் சூரிய கிரகணம் நன்றாக தெரியும்.

முழுமையாக தெரியும்
வரும் 26-ஆம் தேதி காலை 8 மணி முதல் 11.16 மணி வரை இதை பார்க்கலாம். தமிழகத்தில் கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் இந்த சூரிய கிரகணம் முழுமையாக தெரியும்.

கிரகணம்
இதை பார்வையிட தமிழகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அதற்கென்று இருக்கும் கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும். மேற்கண்ட 10 மாவட்டங்கள் அல்லாது சென்னையிலும் கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2031-இல் மீண்டும் கிரகணம்
சூரிய கிரகணம் வரும் போது வெளியே செல்லலாம், சாப்பிடலாம். கர்ப்பிணிகள் வழக்கம் போல் தங்கள் பணிகளை செய்யலாம். இந்த கிரகணம் அடுத்த ஆண்டு பஞ்சாப், ஹரியானாவில் தெரியும். அது போல் 2031-ஆம் ஆண்டு தமிழகத்தின் மதுரை, தேனியில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications