காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி? பாத யாத்திரைக்கு முன் முக்கிய முடிவு!
டெல்லி: இந்தியா முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்வதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 2017ம் ஆண்டு பொறுப்பேற்ற ராகுல் காந்தி, 2019ம் ஆண்டு மக்களவை தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21ல் இருந்து செப்டம்பர் 30க்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவானது மதுசூதன் மிஸ்ட்ரி தலைமையில் தேர்தல் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது தேர்தல் தேதியை அறிவித்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுப்போம் என்று தேர்தல் குழு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல்
நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து 9000 பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக அறியப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலோடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே ராகுல் காந்தியின் பாத யாத்திரை தொடங்க உள்ளது. இதனால் அகில இந்திய அளவிலான நிர்வாகிகள் தேர்தல் மற்றும் அகில இந்திய தலைவர் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது.

மீண்டும் ராகுல்?
ஆனால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி மீண்டும் ஏற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் ராகுல் காந்தி இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தெரிய வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் பாத யாத்திரை மேற்கொள்ள உள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக இருந்து யாத்திரை சென்றால் கட்சியினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எழுச்சி ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பாத யாத்திரை
ஏனென்றால் 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரமாகவே ராகுல் காந்தியின் பாத யாத்திரை பார்க்கப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களில் 3 ஆயிரத்து 500 கி.மீ பாத யாத்திரை நடைபெறுகிறது. ராகுல் காந்தியின் முன்னெடுப்பால் காங்கிரஸ் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

காங்கிரஸ் மேலிடம் முடிவு?
இதனால் பாத யாத்திரை தொடங்குவதற்கு முன் செப். 5ம் தேதி அவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அறிவிக்கவும், பாத யாத்திரை நிறைவடைந்த பிறகு முறைப்படியாக தேர்வு செய்யவும் டெல்லி மேலிடம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications