40 நாடுகளில் பரவும் புதிய stealth Omicron! இந்த உருமாறிய கொரோனா ஆபத்தானதா? வேகமாக பரவுமா? பரபர தகவல்
டெல்லி: உலகையே தற்போது அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் கொரோனாவில் இருந்து தற்போது புதிய வேரியண்ட் (sub-variant) தோன்றியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஓமிக்ரான் கொரோனா முதலில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரை கொரோனா பாதிப்பு உலக நாடுகளிடையே குறைந்து வந்த நிலையில், அதன் பின் மீண்டும் உயரத் தொடங்கியது.
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது.

புதிய வேரியண்ட்
இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்தச் சூழலில் பிரிட்டன் நாட்டில் ஓமிக்ரான் கொரோனாவில் இருந்து தற்போது புதிய வேரியண்ட் (sub-variant) தோன்றியுள்ளதாகவும் இது தொடர்பாக அந்நாட்டு ஆய்வாளர்கள் தீவிர ஆய்வில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. BA.2 அல்லது stealth Omicron எனப்படும் இந்த உருமாறிய கொரோனாவில் உள்ள மாறுபாடுகள் ஓமிக்ரானை போல இல்லை என்பதால் டெல்டாவில் இருந்து இதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன், இந்தியா
இருப்பினும், இதுவரை இந்த BA.2 ஓமிக்ரான் வேரியண்டை ஆய்வாளர்கள் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிடவில்லை. பிரிட்டன் நாட்டில் மட்டும் சுமார் 426 பேருக்கு இந்த புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, டென்மார்க், சுவீடன், சிங்கப்பூர் நாடுகளிலும் இந்த புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கூட சிலருக்கு இந்த புதிய வேரியண்ட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

40 நாடுகள்
குறிப்பாக டென்மார்க் நாட்டில் தற்போது உறுதி செய்யப்படுவோரில் சுமார் 45% பேருக்கு இந்த வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளதாகவும் டென்மார்க் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் 40 நாடுகளில் இந்த புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தானதா
கொரோனா என்று இல்லை அனைத்து வகையான வைரஸ்களும் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ள மருத்துவர் மீரா சந்த், இது வழக்கமான ஒன்று தான் என்றும் புதிய வேரியண்ட்கள் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்த புதிய வேரியண்ட் எப்படித் தோன்றியது என்பது குழப்பமாக இருந்தாலும் கூட இதனால் ஆபத்து எதுவும் இல்லை என டென்மார்க் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வேகமாகப் பரவுமா
இந்த stealth ஓமிக்ரான் நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து இன்னும் அதிகமாகத் தப்பும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் என்றும் இதன் மூலம் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கலாம் என்றும் ஆய்வார்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இதை உறுதியாகச் சொல்ல முடியாது எனத் தெரிவித்த ஆய்வாளர்கள், இது குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications