ஐ.பெரியசாமிக்கு நிம்மதி! வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தடை விதித்துள்ளது.

2006-2011-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பதவி வகித்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் தற்போது திமுக துணைப் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தும் வருகிறார்.

Supreme Court to hear today TN Minister I Periyasamy s appeal plea against HC order in corruption case

அமைச்சர் ஐ.பெரியசாமி, 2006-2011-ல் தமது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீடு ஒன்றை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கீடு செய்தார் என்பது வழக்கு. 2012-ம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 2021-ம் ஆண்டு தம்மை விடுவிக்க கோரி எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மனுத் தாக்கல் செய்தார். இதனையேற்று அமைச்சர் ஐ.பெரியசாமியை கடந்த ஆண்டு எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு எதுவும் செய்யவும் இல்லை.

இந்த பின்னணியில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் பலர் வழக்குகளில் விடுவிக்கப்பட்ட தீர்ப்புகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இதில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு விடுவிக்கப்பட்ட தீர்ப்பும் ஒன்று. இதனை விசாரித்த நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிவுக்கவும் நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரப்பட்டிருந்தது.

இதனிடையே இந்த வழக்கில் தாம் நேரில் ஆஜராக விலக்கு கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனுவை எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி தரப்பு வலியுறுத்தியது. இதனை ஏற்று உச்சநீதிமன்றம் இன்று அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. இன்றைய விசாரணையின் முடிவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலான வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் கீழ் நீதிமன்றத்தின் விசாரணையை ஒத்திவைக்கவும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+