என்ஐஏ அலுவலகத்தில் தனி சிறை.. 12 பேருக்கு மட்டுமே அனுமதி.. உச்ச கட்ட பாதுகாப்பில் அடைக்கப்படும் ராணா
டெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியான ராணா, டெல்லி அழைத்து வரப்பட்டார். ராணாவை தேசிய புலனாயவு முகமை கட்டுப்பாட்டில் எடுத்து பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளது. அதன்பிறகு என்.ஐ.ஏ அலுவலகத்தில் உள்ள சிறையில் விசாரணைக்காக அடைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. விசாரணைக்கு பிறகு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்படலாம் எனவும், அதன் பிறகு மும்பைக்கு மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி தாஜ் ஓட்டல், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 பேர் உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

தஹாவூர் ராணா
உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல் பட்டவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹட்லி, பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணா உள்ளிட்டோர் கூட்டு சதியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் ராணாவை இந்தியா தேடி வந்த நிலையில், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2014-ம் ஆண்டு ராணாவுக்கு 14 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு, அமெரிக்காவிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்தியா வைத்த கோரிக்கையை ஏற்று டிரம்பும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். எனினும், தன்னை நாடு கடத்தக்கூடாது என்று ராணா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
டெல்லியில் கைது
ஆனால், இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இந்திய நேரப்படி நேற்று இரவு ராணாவை அதிகாரிகள் தனி விமானத்தில் ஏற்றினார்கள். இந்த விமானம் இன்று மாலை டெல்லி பாலம் விமானம் நிலையம் வந்தது. ராணா இந்தியா வந்ததும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அவரை கைது செய்தனர்.
முன்னதாக ராணா அழைத்துவரப்பட்டதையடுத்து, பாலம் விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குண்டு துளைக்காத வாகனங்கள், கமோண்டா வீரர்களுடன் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு இருக்கும் ராணா, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அதன்பிறகு தேசிய புலனாய்வு தலைமை அலுவலகத்தில் உள்ள ஸ்பெஷல் சிறையில் ராணா அடைக்கப்பட உள்ளார்.
ஹட்லியுடன் இணைந்து சதித்திட்டம்
பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட இருக்கும் ராணா இருக்கும் பகுதிக்கு செல்ல 12 அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன. என்.ஐ.ஏ டிஜி சதானந்த டேட், ஐஜி ஆஷிஸ் பத்ரா, டிஐஜி ஜெயாராய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மட்டுமே அந்த சிறைக்கு செல்ல முடியும். இதைத்தாண்டி யார் செல்ல வேண்டும் என்றாலும் அனுமதி பெற வேண்டும்.
ராணாவிடம் நடத்தப்பட இருக்கும் விசாரணையில், முக்கிய ஆவணங்களை காட்டி தகவல்களை பெற என்.ஐ ஏ திட்டமிட்டுள்லதாம். ஹட்லியுடன் இணைந்து தீட்டிய சதித்திட்டம் மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ் ஐ யுடன் இருக்கும் தொடர்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இந்த விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications