Budget 2019: ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்குதான் வருமான வரி விலக்கு.. மாறாத உச்சவரம்பு
Recommended Video
டெல்லி: தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை.
தற்போது தனி நபருக்கான வருமான வரிக்கான விலக்கு ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சராக பொறுப்பு வகித்த பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.
அப்போது கோயல் கூறுகையில் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி பேருக்கு பலனடைவர்.

வருமான வரி சலுகை
ஒட்டுமொத்த வருமான வரி சலுகை மூலம் ரூ. 6.25 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை. தனி நபரின் ஆண்டு வருமானத்தில் நிரந்தரக் கழிவுக்கான உச்சவரம்பு ரூ. 40 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது என தெரிவித்திருந்தார்.

நிதி அமைச்சர்
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசே மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்.

நிர்மலா சீதாராமன்
பதவியேற்ற நாள் முதல் கடந்த ஒரு மாதமாக 2019-2020 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தயார் செய்து வந்தார். இந்நிலையில் ஒருங்கிணைந்த மத்திய பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மத்திய அரசின் வரி சலுகைகள்
இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை போல் வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசுகையில் நேரடி வரி விதிப்பு 78 சதவீதம் அதிகரித்துள்ளது. தனி நபர் ஆண்டு வருமானத்திற்கான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கு கீழே வருவாய் கொண்டவர்களுக்கு வரி இல்லை. 5 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருவாய் உள்ளவர்கள் மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டும்.

நடைமுறை
ஆண்டு வருமானம் ரூ 2 கோடி முதல் ரூ 5 கோடி வரை உள்ளவர்களுக்கு 3 சதவீதமும், ஆண்டு வருமானம் 5 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 சதவீதமும் கூடுதல் வரி செலுத்த வேண்டும் என நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார். இந்த நிலையில் 5 லட்சத்து ஒரு ரூபாயிலிருந்து 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 12, 500 ரூபாயுடன் மொத்த வருமானத்தில் 20 சதவீதத்தையும் சேர்த்து வரியாக செலுத்த வேண்டும். அது போல் 10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 1,12,500 ரூபாயுடன் சேர்த்து மொத்த வருமானத்தில் 30 சதவீதத்தையும் சேர்த்து வரியாக செலுத்த வேண்டும். 5 லட்சம் வரை வருமான வரி விலக்கை தவிர்த்து ஸ்லாப்பில் எந்த மாற்றமும் இல்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications