5 வருடம் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.. முதல்முறை செய்தியாளர்களை சந்தித்த மோடி.. பரபரப்பு பேட்டி!
ஐந்து வருடம் ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: ஐந்து வருடம் ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு முடிகிறது. இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
5 வருடத்தில் முதல்முறை மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார். பிரதமர் மோடி சிரித்துக் கொண்டே செய்தியாளர்களிடம் பேசினார்.

மோடி பேட்டி
மோடி தனது பேட்டியில், தேர்தல் பரப்புரை மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இனி கொஞ்சம் இளைப்பாறுவேன். இது ஜனநாயகத்தை கொண்டாட வேண்டிய தருணம். தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி.

வெற்றிபெறுவோம்
தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நாட்டை மீண்டும் ஆளுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இந்த முறை உள்ளது. நாங்கள் கடந்துவந்த பாதை எளிதானதல்ல. மக்களுக்கு நன்றி சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

நன்றி சொன்னோம்
நாட்டின் பல இடங்களுக்கு சென்ற போது மக்களிடம் நன்றி தெரிவிக்க முடிந்தது. மக்களை பார்க்க பார்க்க எனக்கு உற்சாகம் கூடியது. பாஜகவிற்கு வாக்களிக்க மக்கள் மனதளவில் தயாராக இருக்கிறார்கள். 2014 தேர்தலை விட இந்த தேர்தலில் பரப்புரை பெரிய அளவில் இருந்தது.

சீர் திருத்தம்
நாட்டின் நிர்வாக முறைகளில் நாங்கள் நிறைய சீர் திருத்தங்களை கொண்டு வந்து இருக்கிறோம். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம். ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம், என்று மோடி குறிப்பிட்டார்.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications