”மேக் இன் இந்தியா” முழுக்கமுழுக்க இந்தியாவிலேயே உருவான ”டோர்னியர்-228”! உற்சாகமாக பறந்த அமைச்சர்கள்
டெல்லி : முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர் ரக விமானம் மக்களின் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் அசாம் அருணாச்சலப்பிரதேசம் இடையே முதன்முறையாக இயக்கப்பட்டது.
Recommended Video
பிரதமர் அறிவித்த மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான சாதனங்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் டோர்னியர் ரக விமானங்கள் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட நிலையில், இந்த விமானம் மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
டோர்னியர் 228
17 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானமான டோர்னியர் 228, இந்த வகை விமானம் முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட நிலையில் வணிக முறையில் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விமானத்தின் முதல் பயணம்
இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கப்பட்டுள்ள இந்த விமானம் நேற்றிலிருந்து வர்த்தக ரீதியாக தனது போக்குவரத்தினை தொடங்கியுள்ளது. அசாம் மாநிலம் திப்ருகார் நகரத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் அருணாச்சலப் பிரதேசத்தின் சிப்காட் விமான நிலையத்தில் தரை இறங்கியது.தன் மூலம் இந்தியாவில் முழுமையாக தயாரிக்கப்பட்ட விமானத்தை இயக்கிய முதல் விமான நிறுவனம் என்ற பெயரை தட்டிச் சென்றுள்ளது.

முதல் பயணம்
டோர்னியர் ரக ரக விமானங்களை பாதுகாப்பு படையினர் மட்டுமே ஏற்கனவே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு இந்த விமானம் கொண்டுவரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தின் முதல் பயணத்தின்போது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் பல்வேறு முக்கிய பிரபலங்கள் அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்தனர்.

மக்கள் மகிழ்ச்சி
பாசிகாட் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய பிறகு செய்தியாளரும் பேசி அமைச்சர்கள் சிறிய விமானங்களுக்கு விமான சேவையை அளிக்கும் வகையில் பிரதமரின் திட்டத்தின் காரணமாக இது சாத்தியமானதாக பெருமிதம் தெரிவித்தனர். தற்போது இந்த வகை விமானம் குறித்த தகவல்களை இணையத்தில் அதிகம் பேர் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications