பெட்ரோல் விலை உயர்வுக்கு தாலிபான்கள் தான் காரணம்.. பாஜக எம் எல் ஏ பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பெட்ரோல் விலை உயர்வுக்கு தாலிபான்கள் தான் காரணம் என்று பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ அரவிந்த் பெல்லாத் கூறியுள்ளார். பெட்ரோல் பற்றாக்குறை ஆப்கானிஸ்தான் பிரச்சனையால் ஏற்படுள்ளதாக அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லட் கூறுகையில், எரிபொருள் விலை உயர்வின் பின்னணியில் தலிபான்கள் இருக்கின்றனர்.

தலிபான்களின் பிரச்சனை தொடங்கிய காலத்திலிருந்தே, உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை உருவானது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுத்தது என்று பேசியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

எரிபொருள் ஏற்றுமதி

எரிபொருள் ஏற்றுமதி

ஏனெனில் ஆகஸ்ட் 15 ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான வர்த்தகம் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், எரிபொருளைப் பொருத்தவரை இரு நாடுகளுக்கும் இடையே பெரிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உறவு இருந்ததில்லை.

எங்கு இறக்குமதி

எங்கு இறக்குமதி


இந்தியாவிற்கு எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் இடம்பெறவில்லை. ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நைஜீரியா, அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. எனவே ஆப்கானிஸ்தான் நிலைமை இந்தியாவில் எரிபொருள் விலையை பாதிக்க வாய்ப்பில்லை.

மத்திய அரசு வரிகள்

மத்திய அரசு வரிகள்

இந்தியாவில் பெட்ரோல் டீசல் கேஸ் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வுக்கு என்ன காரணம்? வரிகள் தான் முக்கிய காரணம். மாநில மற்றும் மத்திய அரசுகள் விதிக்கும் கணிசமான வரி காரணமாக விலை அதிகமாக இருக்கிறது என்பதை இங்கே கவனிக்க வேண்டியது அவசியம். மத்திய அரசு எரிபொருள் கலால் வரி, மற்றும் மதிப்பு-சேர்க்கப்பட்ட வரி (VAT) மற்றும் மாநில வாரிகள் ஆகியவை மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களால் விதிக்கப்படும் பிற கட்டணங்கள் உள்ளிட்டவைகளால் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக உள்ளது.

Recommended Video

    அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் Afghan மக்கள்.. கொடூரத்தின் உச்சம்!
    விலையை குறைக்க மறுப்பு

    விலையை குறைக்க மறுப்பு

    கடந்த சில மாதங்களாக, எரிபொருள் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்குமாறு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசோ நலத்திட்டங்களுக்காக செலவழிக்க பணத்தை மிச்சப்படுத்துவதால் அதற்காக விதிக்கப்படும் வரிகளை குறைக்க முடியாது என்ற நிலைப்ப்பாட்டில் உறுதியாக உள்ளது. இதுவே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆகும்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+