டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுவதாக தகவல்கள் வருகின்றன.

இந்தியாவில் 17 மாநிலங்களில் 358 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு- மத்திய சுகாதாரத் துறைஇந்தியாவில் 17 மாநிலங்களில் 358 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு- மத்திய சுகாதாரத் துறை

 பயமுறுத்தும் ஓமிக்ரான்

பயமுறுத்தும் ஓமிக்ரான்

ஓமிக்ரானை தடுக்கும் வகையில் இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் அதனையும் தாண்டி ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது. முதன் முதலில் கர்நாடகாவில்தான் ஓமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களுக்கும் பரவியது. இந்தியாவில் தற்போது மகாராஷ்டிரா, டெல்லி, தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இதுவரை மொத்தம் 270--க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

உச்சத்தை எட்டும்

உச்சத்தை எட்டும்

ஓமிக்ரான் வைரஸ் பரவும் வேகம், நோயாளிகளிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸால் இந்தியாவில் கொரோனா 3-வது அலை பிப்ரவரி மாதம் உச்சத்தை எட்டும் என்று ஐஐடி-கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது பிப்ரவரி 3- ம் தேதிக்குள் இந்தியாவில் 3-வது அலை உச்சத்தை எட்டும் அவர்கள் கணித்துள்ளனர்.

ஐஐடி-கான்பூர் ஆராய்ச்சியாளர்கள்

ஐஐடி-கான்பூர் ஆராய்ச்சியாளர்கள்

டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கி பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தை எட்டக்கூடும் என்றும் பல நாடுகளில் ஓமிக்ரான் பரவும் வேகம், தற்போதய அதிகரிப்பு ஆகிய தரவுகளை மையமாக வைத்து இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகம் எடுக்கும் என்று ஐஐடி-கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் இந்த கணிப்பை கூறியுள்ளனர்.

Recommended Video

    கிருஷ்ணகிரி: ஒமிக்ரான் தீவிரத்தை உணரவில்லையா? அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!
    லேசானதாக இருக்கும்

    லேசானதாக இருக்கும்

    ஐஐடி ஹைதராபாத் பேராசிரியர் குழுவின் தலைவர் வித்யாசாகர், இந்தியாவில் மூன்றாவது ஓமிக்ரான் அலை இருக்கும், ஆனால் அது இரண்டாவது அலையின் தாக்கத்தை விட லேசானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்பதையே இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கணிப்பு காட்டுகிறது.

    English summary
    IIT-Kanpur researchers have warned that the 3rd wave of corona in India will reach its peak in February due to the Omicron virus. That is, they predict that the 3rd wave will reach its peak in India by February 3
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X