நாட்டை உலுக்கும் கொரோனா 3வது அலை.. எப்போது முடிவுக்கு வரும் தெரியுமா? நிபுணர் கூறுவது இதுதான்!
டெல்லி: மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை இந்தியாவில் குறையும் அல்லது கிட்டத்தட்ட முடிந்து விடலாம் என கான்பூர் ஐஐடி நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வகை வைரஸ் பரவல் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ஐரோப்பா ஆஸ்திரேலியா இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவிய இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கியுள்ளது. நாளொன்ருக்கு லட்சக்கணக்கில் பாதிப்புகள் பதிவாகி வருகின்றது. தமிழகத்திலும் இந்த பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மும்பை, சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது.

கொரோனா 3வது அலை
இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா மூன்றாவது அலை மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் குறைவாகவே இருக்கும் என கான்பூர் ஐஐடியின் பேராசியர் மணீந்தர அகர்வால் கூறியுள்ளார். கான்பூரில் உள்ள ஐஐடியின் கணிதம் மற்றும் கணினி அறிவியல் பேராசிரியரான மனீந்திர அகர்வால், மும்பை மற்றும் டெல்லியில் ஜனவரி நடுப்பகுதியில் மூன்றாவது அலை உச்சத்தை எட்டும் என்றும், இந்தியாவில் ஒரு நாளைக்கு நான்கு முதல் எட்டு லட்சம் கொரோனா பாதிப்புகள் இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

பாதிப்பு உயர்ந்து குறையும்
மும்பையை பொறுத்தவரை மூன்றாவது அறை இந்த மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும் எனவும் அந்த நிலை வெகு தொலைவில் இல்லை எனக் கூறியுள்ள மகேந்திரசிங் டில்லியிலும் இதேபோல்தான் பாதிப்பு இருக்கும் எனக் கூறினார் மேலும் தற்போது இந்தியா முழுமைக்குமான போதுமே தகவல்கள் கிடைக்காததால் இது முதல்கட்ட தகவல்கள் மட்டுமே எனவும் அடுத்த மாத தொடக்கத்தில் மற்ற இடங்களில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறிவிடுகிறார் மேலும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக மாறி வருவதால் மூன்றாவது அறை எப்போது உச்சத்தை தொடும் என சரியாக மதிப்பிட முடியவில்லை எனவும் தற்போதைய கணக்கீட்டின் படி ஒரு நாளைக்கு 4 முதல் 8 லட்சம் பேர் வரை பரவலான பாதிப்புகள் ஏற்படும் என கூறினார்.

ஒரு மாத அவகாசம்
டெல்லி மற்றும் மும்பையில் பாதிப்புகள் எவ்வளவு வேகமாக உயர்ந்து விட்டதோ அதே அளவு வேகமாக பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளது என கூறியுள்ள அகர்வால், இந்தியா முழுவதும் இப்போதுதான் பாதிப்புகள் உயர ஆரம்பித்து இருக்கிறது எனவும் அது உச்சம் பெற்று கீழே வர இன்னும் ஒரு மாத காலமாக வேண்டும் என்றார் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் தொற்றுநோய் மூன்றாவது அலை இந்தியாவில் குறைவாகவே இருக்கலாம் எனவும் மனித அகர்வால் தெரிவித்துள்ளார்.
Recommended Video

முழு ஊரடங்குக்கு வாய்ப்பு?
கொரோனா முதல் அலையின் போது முழு ஊரடங்கு பரவல் விகிதத்தை இரண்டு மடங்கு குறைந்த நிலையில் இரண்டாவது அலையின் போது பல்வேறு மாநிலங்கள் வெவ்வேறு உத்திகளை கடைபிடித்தன. பகுதி நேர ஊரடங்கு அல்லது இரவு நேர ஊரடங்கு ஆகியவை மூலம் தொற்று பரவலை குறைந்ததை பார்க்க முடிந்தது. இது ஒரு உதவிகரமான முறைதான் என கூறிய அவர் கடுமையான முழு ஊரடங்கு எப்பொழுதும் தொற்றுநோயின் பரவலை குறைக்க அதிகமாகவும் எனும் ஆனால் அது பலரின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழக்கும் நிலைக்கு தள்ளும் என்பதால் அதை ஒரு எதிர்மறையான பார்வையோடு அணுக வேண்டும் எனவும், கொரோனா மரணங்களைப் பற்றி நாம் பேசும் அதே நேரத்தில் சில சமயங்களில் வாழ்வாதார இழப்பால் ஏற்படும் மரணங்கள் பற்றியும் பேச வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications