'இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை.. கண்டிப்பாக ஏற்படும், ஆனால்..' ஐசிஎம்ஆர் புதிய ஆய்வில் முக்கிய தகவல்
டெல்லி: இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டாலும்கூட அது 2ஆம் அலை அளவுக்கு மோசமாக இருக்க வாய்ப்பு குறைவு என ஐசிஎம்ஆர் தனது ஆய்வில் கூறியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.
இதையடுத்து கொரோனா 3ஆம் அலை குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இது குறித்து ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா 3ஆம் அலை
அந்த ஆய்வில் கொரோனா வைரசின் அடுத்த அலை ஏற்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் அது கொரோனா 2ஆம் அலையைப் போல மிகப் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேவையான திட்டங்களை வகுத்து முன்னெச்சரிக்கை பணிகளைச் சரியாக மேற்கொண்டால், எதிர்காலத்தில் எத்தனை அலை ஏற்பட்டாலும் அதனை எளிதாக எதிர்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர்
இருந்தாலும்கூட தற்போதைய சூழ்நிலையில் எதையும் உறுதியாகக் கூற முடியாது. இப்போது வேக்சின் பணிகளை மிக விரைவாக மேற்கொள்வது மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வழி என்றும் ஐசிஎம்ஆர் தனது ஆய்வில் கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் ஜூன் மாதம் மட்டும் சராசரியாக ஒரு நாளைக்கு 18 லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை நாட்டில் 40 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சோதனை
கொரோனா பரவலைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதில் பரிசோதனைகள் முக்கியம். அதிகமாக வேக்சின் சோதனை செய்யப்பட்டால் தான் நாட்டில் கொரோனா பரவல் நிலை எப்படியுள்ளது என்தை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும். அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். தொடக்கம் முதலே பல்வேறு வல்லுநர்களும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றே வலியுறுத்தி வந்தனர். அந்த நிலையை இந்தியா தற்போது அடைந்துள்ளது.

உருமாறிய கொரோனா
இந்தியாவில் தற்போது புதிதாக டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு கவலைக்குரிய கொரோனாவைக பட்டியலிட்டுள்ளது. இதன் காரணமாக முறையான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் நாட்டில் 6 முதல் 8 வாரங்களில் கொரோனா 3ஆம் அலை ஏற்படும் ஆபத்துள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications