நாடாளுமன்றம் கூடுகிறது- பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமையன்று (ஜன.29) தொடங்குகிறது. முதல் நாளில் பட்ஜெட்டுக்கு முன்னோட்டமான பொருளாதார அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டுக்கு முன்னோட்டமான பொருளாதார அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
CEA Dr @SubramanianKri will address a Press Conference on 29th Jan 2021, at 2:30 PM in New Delhi after the presentation of Economic Survey 2020-21 by Finance Minister in Parliament.
— Ministry of Finance (@FinMinIndia) January 28, 2021
Watch LIVE here👇
➡️YouTube - https://t.co/9T01Ouigfn@nsitharamanoffc @Anurag_Office @PIB_India
தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் கேவி சுப்பிரமணியன் தலைமையிலான குழு இந்த பொருளாதார அறிக்கையை தயாரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் டாக்டர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தர உள்ளார்.