குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோனா - தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்வீட்
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனிமைப்படுத்த கொண்டுள்ள நிலையில் அவரைச் சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என குடியரசு துணைத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை 0.56 சதவீதம் குறைந்துள்ளது. இதில் ஓமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக பாதிக்கப்பட்ட 10,050 பேரும் அடங்குவர். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 525 இறப்புகள் பதிவாகியுள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மட்டுமின்றி 3வது அலையில் திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள் என அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக குடியரசு துணைத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஹைதராபாத்தில் உள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, கொரோனா பரிசோதனை செய்ததாகவும் அதில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒரு வாரம் சுய தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளார் எனவும், அவருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் என்று குடியரசு துணைத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications