ராஜஸ்தான் ஃபைல்ஸ்! இந்தியாவில் இந்துக்கள் வாழவே முடியாது! வெடித்த அக்னிஹோத்ரி! குறுக்கே வந்த கங்கனா!
டெல்லி : ராஜஸ்தான் மாநிலம் புதைபொருள் சர்மாவிற்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவில் உண்மையான இந்துக்களால் வாழமுடியாத சூழல் உருவாகி வருகிறது என காஷ்மீர் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஞானவாபி மசூதி குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜகவைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை கூறினார்.
இது இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற ஒரு கருத்தைப் பகிர்ந்த டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜிண்டால், கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதேபோல் நூறு சர்மாவும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நுபுர் சர்மா விவகாரம்
நுபுர் சர்மாவின் இந்த செயலுக்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவின் தூதர்களை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தன. மேலும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்தது. கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் அமைதியாய் அடங்கி இருந்த நிலையில், ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் மீண்டும் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கொடூர கொலை
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபூர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்தான் இந்த பதற்றத்திற்கு காரணம் உதய்ப்பூர் நகரின் மால்தாஸ் பகுதியில் கண்ணையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வருகிறார். நேற்று அவரது கடைக்குள் திடீரென புகுந்த இரண்டு பேர் கண்ணயலாலை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். மேலும் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். மேலும் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கொலை மிரட்டல் பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு
போலீசார் நடத்திய விசாரணையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்த பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கண்ணையா லால் கருத்து வெளியிட்டதாகவும் இதன் காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உதய்பூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு நிலையில் தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

விவேக் அக்னிஹோத்ரி கண்டனம்
இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இந்தியாவில் உண்மையான இந்துக்களால் வாழவே முடியாது என கூறியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் "இந்துஸ்தானில் உண்மையான இந்துக்களால் வாழவே முடியாது என்ற சூழல் உருவாகி வருகிறது. அப்படி வாழ வேண்டுமென்றால் அவர் நகர்ப்புற நக்கலாக இருக்க வேண்டும். அல்லது இருப்பதே தெரியாமல் இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அவர் இறந்திருக்க வேண்டும். தற்போது ராஜஸ்தானில் திகழ்ந்த கொலைக்காக இந்தியாவிடம் கத்தார் நாடு மன்னிப்பு கேட்கவேண்டும்" என கூறியுள்ளார்.

கங்கனா கண்டனம்
மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்," ஒரு மனிதனை கொடூரமாக கொலை செய்துவிட்டு ஜிகாதிகள் அந்த வீடியோவையும் வெளியிடுகின்றனர். கடவுளின் பெயரால்... என கோஷமிட்டப்படி அவர்கள் அந்த மனிதரை கொலை செய்கின்றனர். இந்த வீடியோக்களை பார்க்க எனக்கு தைரியம் இல்லை. நான் மூர்ச்சையாகி விட்டிருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications