Mucormycosis: உயிர்கொல்லியான கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?.. மூளையை தாக்கும் அபாயம்!
டெல்லி: கட்டுக்குள் இல்லாத நீரிழிவு நோய், நீண்ட காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்த கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகார்மைக்கோசிஸ் எனப்படும் ஒரு உயிர் கொல்லி பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
Recommended Video
இந்த நோய் மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதித்தவர்கள் அதிகரித்து கொண்டே வருகிறார்கள். இதையடுத்து மத்திய அரசும் இதுகுறித்து ஆதாரப்பூர்வமாக அறிவுரைகளை வழங்கியுள்ளது.
இந்த நோய் தொடர்ந்து மருந்துகளை எடுப்போரை அதிகம் பாதிப்பதாக அரசு கூறுகிறது. இந்த நோய் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

அரிதான நோய்
கருப்பு பூஞ்சை நோய் என்பது அரிதான நோயாகும். ஆனால் மிகவும் மோசமான பூஞ்சை தொற்று. சுற்றுச்சூழலில் இயற்கையாகவே இருக்கும் மியூகார்மைசிட்ஸால் ஏற்படுகிறது. எந்த நோயாளியாவது ஏற்கெனவே உடல் நிலை பாதிப்பு இருந்தாலோ அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதாலோ ஏற்படுகிறது.

உரம்
அதாவது மண் தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையாலும் இது ஏற்படுகிறது. மண், காற்றில் கூட இந்த பூஞ்சை இருக்கிறது. இந்த பூஞ்சைகள் நாம் சுவாசிக்கும் போது உள்ளே சென்று சைனஸ் அல்லது நுரையீரலை பாதிக்கிறது.

அடிப்பட்ட காயங்கள்
அது போல் ஏதாவது வெட்டுக் காயங்கள், அடிபட்ட காயங்கள் மற்றும் தோலில் பாதிப்பு போன்றவற்றால் எளிதாக நுழைகிறது. இந்த நோய் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படுகின்றன என்பதை பார்ப்போம். கண்கள், மூக்கு பகுதியை சுற்றி வலி ஏற்படும். கண்கள் சிவத்தல், காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தியில் ரத்தம், மனநிலையில் மாற்றம் உள்ளிட்டவை ஏற்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நோய் அறிகுறிகள்
சைனுசைட்டீஸ்- மூக்கு அடைப்பு இருத்தல்
ஒரு பக்கம் முகம் வீங்கி வலியை ஏற்படுத்துதல்
மூக்கை சுற்றி கருப்பு நிறத்தில் இருத்தல்
பல் வலி
வலியுடன் கூடிய மங்கலான பார்வை அல்லது இரட்டை பார்வை
தோலில் புண்கள்
ரத்தம் உறைதல்
மார்பில் வலி, மோசமான சுவாச அறிகுறிகள்
ஆகியவை இருந்தாலும் கருப்பு பூஞ்சை நோய் என்பதை சந்தேகிக்கலாம். அது போல் கட்டுக்குள் இல்லாத நீரிழிவு நோய் இருந்தாலும் பெரும் பாதிப்பை கொடுக்கிறது.

நோயை குணப்படுத்தலாம்
இதற்கு பூஞ்சை தொற்றை ஒழிக்கும் ஆன்டிபயாடிக்குகள் மூலமாக நோயை குணப்படுத்தலாம். மேலும் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மருந்துகளை எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பின்னரும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதனையிட வேண்டும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications