Mucormycosis: உயிர்கொல்லியான கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?.. மூளையை தாக்கும் அபாயம்!
டெல்லி: கட்டுக்குள் இல்லாத நீரிழிவு நோய், நீண்ட காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்த கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகார்மைக்கோசிஸ் எனப்படும் ஒரு உயிர் கொல்லி பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
Recommended Video
இந்த நோய் மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதித்தவர்கள் அதிகரித்து கொண்டே வருகிறார்கள். இதையடுத்து மத்திய அரசும் இதுகுறித்து ஆதாரப்பூர்வமாக அறிவுரைகளை வழங்கியுள்ளது.
இந்த நோய் தொடர்ந்து மருந்துகளை எடுப்போரை அதிகம் பாதிப்பதாக அரசு கூறுகிறது. இந்த நோய் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

அரிதான நோய்
கருப்பு பூஞ்சை நோய் என்பது அரிதான நோயாகும். ஆனால் மிகவும் மோசமான பூஞ்சை தொற்று. சுற்றுச்சூழலில் இயற்கையாகவே இருக்கும் மியூகார்மைசிட்ஸால் ஏற்படுகிறது. எந்த நோயாளியாவது ஏற்கெனவே உடல் நிலை பாதிப்பு இருந்தாலோ அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதாலோ ஏற்படுகிறது.

உரம்
அதாவது மண் தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையாலும் இது ஏற்படுகிறது. மண், காற்றில் கூட இந்த பூஞ்சை இருக்கிறது. இந்த பூஞ்சைகள் நாம் சுவாசிக்கும் போது உள்ளே சென்று சைனஸ் அல்லது நுரையீரலை பாதிக்கிறது.

அடிப்பட்ட காயங்கள்
அது போல் ஏதாவது வெட்டுக் காயங்கள், அடிபட்ட காயங்கள் மற்றும் தோலில் பாதிப்பு போன்றவற்றால் எளிதாக நுழைகிறது. இந்த நோய் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படுகின்றன என்பதை பார்ப்போம். கண்கள், மூக்கு பகுதியை சுற்றி வலி ஏற்படும். கண்கள் சிவத்தல், காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தியில் ரத்தம், மனநிலையில் மாற்றம் உள்ளிட்டவை ஏற்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நோய் அறிகுறிகள்
சைனுசைட்டீஸ்- மூக்கு அடைப்பு இருத்தல்
ஒரு பக்கம் முகம் வீங்கி வலியை ஏற்படுத்துதல்
மூக்கை சுற்றி கருப்பு நிறத்தில் இருத்தல்
பல் வலி
வலியுடன் கூடிய மங்கலான பார்வை அல்லது இரட்டை பார்வை
தோலில் புண்கள்
ரத்தம் உறைதல்
மார்பில் வலி, மோசமான சுவாச அறிகுறிகள்
ஆகியவை இருந்தாலும் கருப்பு பூஞ்சை நோய் என்பதை சந்தேகிக்கலாம். அது போல் கட்டுக்குள் இல்லாத நீரிழிவு நோய் இருந்தாலும் பெரும் பாதிப்பை கொடுக்கிறது.

நோயை குணப்படுத்தலாம்
இதற்கு பூஞ்சை தொற்றை ஒழிக்கும் ஆன்டிபயாடிக்குகள் மூலமாக நோயை குணப்படுத்தலாம். மேலும் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மருந்துகளை எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பின்னரும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதனையிட வேண்டும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications