மே 17க்கு பின் ஊரடங்கு நீக்கப்படுமா? முக்கிய ஆலோசனை.. முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மீட்டிங்!
டெல்லி: இந்தியா முழுக்க மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி நாளை மதியம் மூன்று மணிக்கு ஆலோசனை செய்ய உள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று முறை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதற்காக இந்தியாவை மொத்தம் மூன்று சோன்களாக மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது. சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என்று மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை செய்தார்
இந்தியாவில் ஒவ்வொரு முறை ஊரடங்கை நீட்டிக்கும் முன் பிரதமர் மோடி மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை செய்வது வழக்கம். இதுவரை ஐந்து முறை மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை செய்துள்ளார். எப்படி லாக்டவுனை அமல்படுத்தலாம், எப்படி கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று பிரதமர் மோடி ஆலோசனை செய்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் இந்தியா முழுக்க மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி நாளை மதியம் மூன்று மணிக்கு ஆலோசனை செய்ய உள்ளார்.

நாளை மீட்டிங்
நாளை மதியம் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு சென்றுள்ளது . நாளை நடக்கும் மீட்டிங்கில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் எடுக்கப்பட உள்ளது. லாக்டவுன் குறித்தும் கொரோனா பரவல் குறித்தும் இதில் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனர். இந்தியாவில் கொரோனா லாக்டவுனை முடிவிற்கு கொண்டு வரும் எண்ணத்தில் மத்திய அரசு இருப்பதாக கூறப்படுகிறது. 17ம் தேதிக்கு பின் மேலும் லாக்டவுன் நீட்டிக்கப்படாது என்று கூறுகிறார்கள்.

விவாதம் செய்கிறார்கள்
இது தொடர்பாக நாளை விவாதம் செய்வார்கள்.அதோடு லாக்டவுனை நீக்கினால் எப்படி படிப்படியாக நீக்குவது.கட்டுப்பாடுகளை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்துவது என்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர். உடனடியாக கட்டுப்பாடுகளை தளர்த்தாமல் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப் போகிறார்கள் என்று ஆலோசனை செய்ய உள்ளனர். அதேபோல் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்ய இருக்கிறார்கள்.

ஆய்வு குழு சென்றுள்ளது
ஏற்கனவே இந்தியாவில் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் 10 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு குழுவை அனுப்பி உள்ளது. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்படி கட்டுப்பாடுகளை அதிகரிப்பது என்று இந்த குழு ஆலோசனைகளை வழங்கும். அதனால் இந்த மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications