இடம்பெயர் தொழிலாளர்கள்... ராணுவத்தை அனுப்பி உதவ கோரி தர்ணா- டெல்லியில் யஷ்வந்த் சின்ஹா கைது
டெல்லி: இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்புவதற்கு ராணுவத்தை அனுப்பி உதவி செய்ய கோரி போராட்டம் நடத்திய முன்னாள் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கைது செய்யப்பட்டார்.
கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் லாக்டவுனால் இடம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் துயரம் தேசத்தையே உலுக்கி வருகிறது. உடைமைகளோடும் உறவுகளோடும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சொந்த மண்ணை நோக்கி அகதிகளாக செல்லும் இடம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பேரவலம் நெஞ்சை தகிக்க வைக்கிறது.

இந்த நிலையில் டெல்லி ராஜ்காட் பகுதியில் முன்னாள் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா திடீரென போராட்டம் நடத்தினார். இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்ப ராணுவத்தை பயன்படுத்தி உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து யஷ்வந்த் சின்ஹா தர்ணா போராட்டம் நடத்தினார்.
அவருடன் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனையடுத்து யஷ்வந்த் சின்ஹாவை டெல்லி போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், இடம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தை எப்படி கையாள்வது என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசு என்பது ஏழைகளுக்கு எதிரானது. வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் இந்தியர்களை அழைத்து வர முடிகிறது. ஆனால் சொந்த நாட்டில் தொழிலாளர்களை சாலைகளில் நடக்க விடுகிறார்கள் என சாடினார்.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. திலீப் பாண்டே கூறுகையில், ஒரு நாளைக்கு 20,000 ரயில்களை நம்மால் இயக்க முடியும். ஒரு நாளைக்கு 2.3 கோடி பேர் ரயிலில் பயணிக்கிறார்கள். இதை இப்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications