சாலையோரம் சாக்குமூட்டை.. சடலமாகக் கிடந்த பாண்டிஸ்வரி! குறுக்கே வந்த கெளசிக்! வெலவெலத்த வேடந்தூர்!
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கள்ளக் காதலியை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி சடலத்தை வீசி சென்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பூலாங்குளம் என்ற பகுதியில் சாக்குமூட்டையில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் ஒன்று இருப்பதாக வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சடலமாக கிடந்தவர் கீழதிப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி என்பது தெரியவந்தது.
திண்டுக்கல்லில் அதிர்ச்சி
மேலும் பாண்டீஸ்வரி கணவர் அமுல்ராஜ் என்பதும் அவர் ஆந்திராவிற்கு கஞ்சா கடத்தி சென்ற போது அங்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் பாண்டீஸ்வரி தனியாக வசித்து வந்தார்.
கள்ளக்காதல் விவகாரம்
இந்நிலையில் நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள சேடபட்டியை சேர்ந்த கௌசிக் பாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இரண்டு மாதங்களாக கௌசிக் பாண்டி மற்றும் பாண்டீஸ்வரி ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
கொடூர கொலை
இந்த நிலையில் இன்று காலை பாண்டீஸ்வரியை கௌசிக் பாண்டியுடன் வாக்குவாதம் ஈடுபட்டது இதில் ஆத்திரமடைந்த கௌசிக் பாண்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி சாலையோரத்தில் தூக்கி வீசிச் சென்றுள்ளதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. பின்பு சடலத்தை மீட்ட வேடசந்தூர் காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் பாண்டீஸ்வரியை கொலை செய்த கௌசிக் பாண்டியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாண்டீஸ்வரி இரண்டு வருடங்களுக்கு முன்பு 9 மாத நிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.