பைக் மோதி தீப்பற்றி எரிந்த அரசு பஸ்.. பிளஸ் 2 மாணவர் பலி.. திண்டுக்கல் அருகே பதைபதைக்கும் விபத்து
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதியதில் பிளஸ் 2 மாணவர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர். மேலும் பைக் மோதி தீப்பிடித்ததில் அரசு பஸ் முழுவதுமாக எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள், டிரைவர், கண்டகர்கள் உயிர் பிழைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் அரசு பஸ் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பாலத்தில் பைக் ஒன்று வந்தது. பைக்கில் 3 பேர் பயணம் செய்தனர். ஒருவர் பைக் ஓட்ட 2 பேர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். திடீரென்று பைக் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது. இதனால் பைக்கில் சென்ற 3 பேரும் கீழே விழுந்தனர். பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இருப்பினும் பைக்கில் வந்த பிளஸ் 2 மாணவன் பிரவீன் உயிரிழந்தார். அவருடன் வந்த 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக பஸ் மீது மோதிய பைக் திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ வேகமாக பஸ்சுக்கும் பரவியது. இதனால் பஸ்சும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. முன்கூட்டியே பயணிகள், டிரைவர், கண்டக்டர்கள் வேகமாக வெளியே வந்தனர். இதனால் பஸ்சில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
இருப்பினும் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அந்த இடம் முழுவதும் கரும்புகையானத. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து நடந்த இடம் மேம்பாலம் என்பதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திது.












Click it and Unblock the Notifications