கொடைக்கானல் ட்ரிப் போறீங்களா.. அப்ப இதை கொண்டுபோக மறக்காதீங்க.. மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய உத்தரவு
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700-க்குள் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு 7,000-ஐ நெருங்கி விட்டது.
ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையின் நிலை மிக மிக மோசமாக உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று கிடுகிடுவென உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது கொரோனா.

ஊரடங்கு
நிலைமை இப்படி இருக்க வேறு வழியின்றி ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கையில் எடுத்தது. தமிழகத்தில் நேற்று இரவு முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. வார இறுதி நாள் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கின்போது மட்டும் அரசு, தனியார் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுட்டது.

சுற்றுலாதலங்களுக்கு செல்லலாம்
கடந்த காலங்களில் ஊரடங்கின்போது சுற்றுலாதலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலாதலங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம். ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையை பின்பற்றி ஆக வேண்டும்.

மலைகளின் இளவரசி
தமிழகத்தின் மிக பிரபலமான சுற்றுலாதலமான 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் இறுகியுள்ளன.

இரண்டு டோஸ் தடுப்பூசி அவசியம்
இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழை காட்டினால்தான் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு ஏரியில் படகு சவாரி செய்வதற்கும், பூங்காக்களுக்கு செல்வதற்கும் அனுமதி வழங்கப்படும். இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் உறுதியாக கூறியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications