பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்- டெல்லியில் பிறந்து பாக். சர்வாதிகாரியானவர்!
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்.
துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் (வயது 79) உடல்நலக் குறைவால் காலமானார்.
1943-ம் ஆண்டு டெல்லியில் ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி பிறந்தவர் பர்வேஸ் முஷாரப் (பர்வேஸ் முஷரஃப்). 1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பர்வேஸ் முஷாரப் குடும்பம் இடம் பெயர்ந்தது.

1964-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்து அதன் தளபதியாகவும் உயர்ந்தார். 1998-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவி வகித்தார். அப்போது பொருளாதார நெருக்கடி, காஷ்மீர் விவகாரம் என பல்வேறு நெருக்கடிகளில் நவாஸ் ஷெரீப் சிக்கித் தவித்தார்.

அந்த சூழலில் பர்வேஸ் முஷாரப்பை ராணுவ தளபதி பதவியில் இருந்து நீக்க நவாஸ் ஷெரீப் முயற்சித்தார். ஆனால் முஷாரப்போ, நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார். பின்னர் பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக, புதிய அதிபரானார் முஷாரப்.
2007-ம் ஆண்டு பாகிஸ்தான் தலைமை நீதிபதி முகம்மது செளத்ரியை பதவி நீக்கம் செய்தார் முஷாரப். இதனைக் கண்டித்து பாகிஸ்தானில் உள்நாட்டு கிளர்ச்சி வெடித்தது. மேலும் இஸ்லாமிய மதகுருக்கள் ஷரியா சட்டத்தை அமல்செய்ய முயற்சிப்பதாக கூறி இஸ்லாமாபாத் லால் மஸ்ஜித் மீது முஷாரப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இதில் 100-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதனாலேயே பாகிஸ்தானில் தலிபான்கள் உருவாகினர்.

2007-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்ட நவாஸ் ஷெரீப் மீண்டும் நாடு திரும்பினார். அப்போது தமது பதவி காலத்தையும் அவசர நிலையையும் நீட்டிக்க முஷாரப் முயற்சித்தார். 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் முஷாரப் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் தமது பதவியை ராஜினமா செய்துவிட்டு பாகிஸ்தானை விட்டே தப்பி ஓடினார் முஷாரப்.
லண்ட, துபாய் என ஓடிக் கொண்டிருந்த முஷாரப், 2013-ல் மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய போது கைது செய்யப்பட்டார். அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. பெனாசீர் பூட்டோ படுகொலை உட்பட பல தேச துரோக வழக்குகள் முஷாரப் மீது பாய்ந்தன. பின்னர் துபாய்க்கு முஷாரப் தப்பி ஓடினார். 2019-ம் ஆண்டு முஷாரப்புக்கு தேசதுரோக வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் உடல்நலக் குறைவால் முஷாரப் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று முஷாரப் காலமானார்.
இந்தியாவுடனான கார்கில் யுத்தத்துக்கு காரணமானவர் முசாரப். 2001-ம் ஆண்டு இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் ஆக்ராவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் முஷாரப் பங்கேற்றார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications