ஆர்சிபிக்கு எதிராக 3 தப்பான முடிவுகள்.. கோபமடைந்த கோலி.. அம்பயரிடம் சென்று ஆவேச வாக்கு வாதம்
துபாய்: சார்ஜாவில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியில், அம்பயரிடம் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்தில் எலிமினேட்டர் சுற்றில் நேற்று இவ்விரு அணிகளும் மோதின.
முதலில் பேட் செய்த விராட் கோலி அணி 138 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. இதற்குள் கொல்கத்தாவை கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் தேவைப்பட்டன. ஆனால் அதற்கு முட்டுக் கட்டை போடுவதை போல இருந்தது அம்பயர் செயல்பாடு.
சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க!
சர்ச்சை முடிவுகள் அறிவித்த நடுவர்
அதிலும் விரேந்தர் சர்மா என்ற நடுவர் கொடுத்த முடிவுகள் அனைத்துமே சர்ச்சைக்குரியதாகவே இருந்தன. மொத்தம் 3 முறை இதே நடுவர் தப்பான முடிவை கூறினால் விராட் கோலிக்கு எப்படி இருக்கும். ஆம்.. சஹல் பந்து வீச்சில் கொல்கத்தா வீரர் திரிபாதி எல்பிடபிள்யூ ஆனபோதும் வீரேந்திர சர்மா அவுட் தரவில்லை. டிஆர்எஸ் கேட்டார் கோலி. அதில் அது கிளியர் அவுட் என்பது தெரியவந்தது. எனவே மூன்றாவது நடுவர், அவுட் கொடுத்தார்.
வாக்குவாதம்
விக்கெட் வீழ்ந்ததை கொண்டாடிய கோலி, அதன்பிறகு நேராக வீரேந்திர சர்மாவிடம் சென்றார். நான்தான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.. பால் நேரா ஸ்டெம்புக்கு போவதை போலதானே இருந்தது.. அது ஏன் உங்களுக்கு தெரியவில்லை.. என்பது போல கைகளை ஆட்டி ஆட்டி கோபத்தோடு நடுவரிடம் விராட் கோலி பேசினார். இந்த காட்சிகளை டிவியில் பார்த்ததும் ஏதோ பெரிய மோதல் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆர்சிபிக்கு எதிராக அம்பயர்
3 முறை வீரேந்திர சர்மா ஆர்சிபிக்கு எதிராக தப்பாக தீர்ப்பு வழங்கினார். ஒவ்வொரு முறையும் கோலி டிஆர்எஸ் போய், அது தப்பான முடிவு என்பதை நிரூபித்தார். 3 அடி வாங்கிய பிறகு திரைப்படங்களில் எம்ஜிஆர் பதிலடி தருவதை போல விராட் கோலியும் பொங்கிவிட்டார். இருப்பினும் அடுத்த ஓவர் இடைவெளியில் களத்தில் நின்ற மற்றொரு சக நடுவர் கோலியிடம் வந்து, இப்படியெல்லாம் பேசக் கூடாது பார்த்துக்கோங்க என்பதை போல ஏதோ சொன்னார். அதை நல்லபிள்ளையாக கேட்டுக் கொண்ட கோலி சிரித்த முகத்தோடு அங்கேயிருந்து நகர்ந்து சென்றார்.
என்ன தவறுகள்?
ஆர்சிபி பேட்டிங் செய்தபோது சபாஷ் அகமது மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோருக்கு வீரேந்திர சர்மா எல்பிடபிள்யூ கொடுத்தார். ஆனால் டிஆர்எஸ்சில் அது தவறு எனத் தெரியவந்தது. பேட்டில் பந்து பட்ட பிறகுதான், கால் காப்பில் பந்து பட்டது. எனவே அவுட் இல்லை. டிஆர்எஸ்சில் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது. 3வது விஷயம், ஆர்சிபி பவுலிங் போடும்போது திரிபாதிக்கு அவுட் இல்லை என்று வீரேந்திர சர்மா கூறியதாகும்.
கேப்டனாக விராட் கோலி
இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதையடுத்து ஆர்சிபி வெளியேறியது. கேப்டனாக விராட் கோலிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடராகும். தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு ஆடப்போவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார். ஆனால், கேப்டனாக தொடரப்போவதில்லை என்பது ஏற்கனவே அவர் வெளியிட்ட அறிவிப்பாகும்.