ஈரோடு அருகே தலையில் கல்லால் அடித்து இளைஞர் கொலை.. பகீர் காரணம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கட்டிடத்தொழிலாளி தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளத்தொடர்பு காரணமாக கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னேகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (வயது 62). மனைவியை இழந்த கட்டிடத் தொழிலாளி செல்வன் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையம் காலனியில் உள்ள தனது சம்பந்தி ஆறுமுகம் - காஞ்சனா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
கடந்த ஓராண்டாக இதே பகுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் செல்வன் இன்று காலை வெங்கநாயக்கன்பாளையம் காலனியில் உள்ள சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான கட்டுமான பணி பாதியில் நின்ற வீட்டில் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அருகே கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் ஹாலோ பிளாக் கல் ரத்தக்கறையுடன் கிடந்துள்ளது.

தகவல்
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சத்தியமங்கலம் துணை கண்காணிப்பாளர் ஜெயபாலன் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன நடந்தது
இதுதொடர்பாக மேலும் தடயங்களை கண்டறிவதற்காக ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் பிரிவு வரவழைக்கப்பட்டுள்ளது. கட்டிடத் தொழிலாளி தலையில் ஹாலோபிளாக் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளத்தொடர்பு காரணமாக கொலை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெருங்கி பழகினர்
சேலம் அருகே கள்ளக்காதல் தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்தவர் கிருபைராஜ்(23). தனியார் ஆலை ஒன்றில் வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கலைமணி (23) என்ற திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கொதித்த காதலன்
பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். கள்ளக்காதலி கலைமணியை சந்திக்கச் செல்லும்போது கிருபைராஜ், அவரது நண்பன் கலையரசனையும் உடன் அழைத்துச் செல்வார்.அப்போது கலையரசனுக்கும் கலைமணிக்கும் பழக்கம் ஏற்பட்டது.இதனால் நண்பர்களிடையே கலைமணியை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டு இருவரும் மோதிக் கொண்டனர்.

தகராறு
இதனால் நண்பர்கள் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று சேலம் குமரகிரி அருகே உள்ள மலைப் பகுதிக்கு கிருபைராஜுயும் , கலைமணியும் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கலையரசன் இருவரையும் பார்த்து கோபமடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

உயிரிழப்பு
அப்போது கிருபைராஜ் கலைமணியை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து வருவதால் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுள்ளார்.ஆனால் இதற்கு கலையரசன் மறுப்பு தெரிவித்து நான் கலைமணியை திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.பிறகு மீண்டும் நண்பர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த கலையரசன் தான் இரண்டு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து கிருபைராஜை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கிருபைராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
-
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications