ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக ஜெயிக்காது.. நாளைக்கு வரும் ஹேப்பி நியூஸ்: செங்கோட்டையன்
இடைத்தேர்தலில் திமுக ஜெயிக்காது என்றும் நாளை மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்றும் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு: அதிமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாக கூறியுள்ளார். இடைத்தேர்தலில் திமுக ஜெயிக்காது என்றும் நாளைய தினம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்றும் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவப்பிரசாத் , தேமுதிக சார்பில் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஒ.பன்னீர் செல்வம் அணியும் தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் அதிமுக சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். அதிமுக தரப்பில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இருதரப்பினரும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இரட்டை இலை சின்னம் பிரச்சனையால் வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரட்டை இலை கிடைக்காவிட்டால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக வேட்பாளர் குறித்த கேள்விக்கு நாளை மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்றார். வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் இடைத்தேர்தலில் அதிமுக வெல்வது உறுதி எனவும் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications