பாஜகவிடம் தோற்கக் கூடாது.. தெலுங்கானா சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த கே.சி.ஆர்.வியூகம்?
ஹைதரபாத்: தெலுங்கானா சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனைகளை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும் மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 119 எம்.எல்.ஏக்களைக் கொண்டது தெலுங்கானா சட்டசபை.
தெலுங்கானாவின் முதலாவது சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) 103 இடங்களில் வென்றது. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 7; காங்கிரஸ் 5; பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றன. முதல்வராக டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் பதவி வகித்தார்.

தெலுங்கானாவில் மீண்டும் டிஆர்எஸ்
தெலுங்கானா சட்டசபையின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் முடிவடைவதற்கு 9 மாதங்களுக்கு முன்னரே 2018-ல் 2-வது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் தெலுங்குதேசம், காங்கிரஸ், சிபிஐ கூட்டணி அமைத்து டிஆர்எஸ் கட்சியை எதிர்த்து நின்றன. ஆனாலும் டிஆர்எஸ் கட்சி 88 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வென்று வலிமையை காட்டியது. பாஜக 1; தெலுங்குதேசம் 2 இடங்களில் வென்றன. 2-வது தேர்தலிலும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 7 இடங்களைப் பெற்றது.

பாஜகவின் வியூகம்
தெலுங்கானா சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற வேண்டும். தெலுங்கானாவில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்பது பாஜகவின் வியூகம். தெலுங்கானாவில் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சிதைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. காங்கிரஸ் இடத்துக்கு முன்னேறியாக வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு.

பாஜக எதிர்ப்பில் உறுதி
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சிகளை எடுத்தார் சந்திரசேகர ராவ். திடீரென இந்த முயற்சிகளை கிடப்பில் போட்டதால் அவர் பாஜகவின் பி டீம் என்கிற விமர்சனம் எழுந்தது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த சந்திரசேக ராவ், பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் தீவிரம் காட்டினார். பாஜகவை தெலுங்கானாவில் காலூன்ற விடமாட்டோம் என தொடர்ந்து பேசி வருகிறார்.இந்நிலையில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை சந்திரசேகர ராவ் சந்தித்தும் பேசினார்.

முன்கூட்டியே தேர்தல்
இந்த பின்னணியில் பாஜகவை மாநிலத்தில் தடுத்து நிறுத்த, அதன் வியூகங்களுக்கு முட்டுக்கட்டை போட முன்கூட்டியே தேர்தலை நடத்தலாம் என சந்திரசேகர ராவ் ஆலோசித்து வருகிறாராம். கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது தெலுங்கானாவுக்கும் தேர்தல் நடத்தலாம் என்பதுதான் சந்திரசேக ராவின் வியூகம் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications