ஓட்டு இல்லை.. கண்டுகொள்ளவும் ஆளில்லை! குஜராத்தில் கண்ணீரில் வாழும் 17 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்
காந்திநகர்: குஜராத்தில் பிழைப்புக்காக புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் 17 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்களின் நலன்கள் குறித்தும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் எந்தக் கட்சியும் கவலைப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த 17 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்களில் கணிசமானோருக்கு வாக்குரிமை இல்லாததால் அவர்களை ஒரு பொருட்டாக கூட எந்த அரசியல் கட்சிகளும் நினைப்பதில்லை.
இதன் காரணமாக, பல தசாப்தங்களாக கண்ணீருடனும், வலிகளுடனுமே இவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த சூரத் தொகுதி
குஜராத் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. இந்த தொகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தியது சூரத் மாவட்டத்தில் இருக்கும் 19 தொகுதிகளில் தான். இந்த 19 தொகுதிகளில் யார் அதிக சீட்களை கைப்பற்றுகிறார்களோ, அந்தக் கட்சியே ஆட்சியில் அமரும் என்பது குஜராத் அரசியலில் எழுதப்படாத விதிகளில் ஒன்று.

துன்பத்தில் உழலும் 17 லட்சம் தொழிலாளர்கள்
அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சூரத் தொகுதியில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சுழன்று சுழன்று தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்டன. ஆனால், அவற்றில் எந்தவொரு கட்சியும் அங்கு வாழ்ந்து வரும் 17 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்களின் நலன் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏனெனில், அவர்களில் கணிசமானோருக்கு வாக்குரிமை கிடையாது. இதனால் அவர்களை பற்றி பேசவோ, அவர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என்பது குறித்து கேட்கவோ எந்தக் கட்சிக்கும் நேரம் இருப்பதில்லை.

கொத்தடிமைகளை போல..
சூரத்தில் பரவலாக வசிக்கும் 17 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்களில் ஒடிசா, உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம். இவர்கள் அங்குள்ள துணி தயாரிப்பு நிறுவனங்களிலும், வைரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால் எந்த அரசியல் கட்சிகளும் இவர்களுக்கு ஆதரவாக வர மாட்டார்கள் என தெரிந்துகொண்ட அந்த நிறுவனங்கள், இவர்களிடம் கொத்தடிமைகளை போல வேலை வாங்குகின்றன. நாளொன்றுக்கு சுமார் 12 மணிநேரம் இவர்கள் வேலை பார்க்க வேண்டும். ஆனால் மாதத்துக்கு ஒரு நாள் மட்டுமே இவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

"அரசியல் அங்கீகாரம் வேண்டும்"
இதுதவிர, இவர்களுக்கு பணிப் பாதுகாப்பு, பணிக்கொடை என ஏதும் கிடையாது. இவ்வளவு வேலையை வாங்கியும் இவர்களுக்கு மிக சொற்ப அளவு ஊதியமே அந்நிறுவனங்கள் வழங்குகின்றன. அதுமட்டுமல்லாமல், அவர்களை எந்த நேரம் வேண்டுமானாலும் வேலையில் இருந்து நிறுவனங்கள் நீக்குகின்றன. இதுபோன்ற சூழலிலும், 3 வேளை உணவுக்காக மட்டுமே அவர்கள் சூரத்தை விட்டு செல்லாமல் இருக்கிறார்கள். எனவே, இந்த வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமையை கொடுத்து, அவர்களுக்கும் அரசியல் ரீதியிலான அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. பரிசீலிக்குமா அரசியல் கட்சிகள்?
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications