எமிரேட்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட 3 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் டெல்லியில் கைது- கிடுக்குப்பிடி விசாரணை!
டெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட 3 பேர் நேற்று இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். டெல்லி வந்திறங்கிய 3 பேரையும் கைது செய்து தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகின் மிக கொடூரமான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இந்தியர்கள் இணைவது தொடர் கதையாகி வருகிறது. இந்த இயக்கத்துக்கு ஆதரவாளர்களாகவும் இயக்கத்தில் சேர முயற்சித்தும் வெளிநாடுகளில் தொடர்ந்து பல இந்தியர்கள் பிடிபட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலையில் சிரியா, ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் 23 இந்தியர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந் நிலையில் இந்தியாவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களான அட்னான் உசேன், முகமது பர்கான், ஷேக் அசார் அல் இஸ்லாம் ஆகிய மூவரையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கைது செய்து நேற்று இந்தியாவுக்கு நாடு கடத்தியது. இந்த 3 பேரும் மகாராஷ்டிரா, கர்நாடகா, காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் அபுதாபி பிரிவை சேர்ந்தவர்களாக இவர்கள் கருதப்படுகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் நடத்த இவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக தெரியவந்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் நேற்று வந்திறங்கிய அவர்களை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் 4 இந்தியர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி!












Click it and Unblock the Notifications