கோனார்க் ரயில் மோதியதில் 6 பயணிகள் பலி.. ஆந்திராவில் சோகம்
அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் பழுதாகி நின்ற ரயிலில் இருந்து இறங்கிய 5 பேர் வேறொரு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

குவாஹாத்தியிலிருந்து ஹைதராபாத் நோக்கி சூப்பர் பாஸ்ட் ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது பத்துவா கிராமத்தில் தொழில்நுட்ப கோளாறால் ரயில் பாதியிலேயே நின்றுவிட்டது.
அந்த ரயில் கோளாறு சீரமைக்கப்படும் என நீண்ட நேரமாக பயணிகள் காத்திருந்தனர். ஆனாலும் சீரமைக்க தாமதமானதால் அந்த ரயிலில் இருந்த 6 பயணிகள் அருகில் உள்ள ஒரு ரயில்வே டிராக்கில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த டிராக்கில் கோனார்க் ரயில் வந்து கொண்டிருந்தது.
இதை கவனிக்காமல் அவர்கள் 6 பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோனார்க் எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேரும் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸ் சம்பவ இடத்திற்கு போய் உடல்களை மீட்டனர்.
இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications