பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11000 கோடி மோசடியை கண்டறிந்தது புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி!
பஞ்சாப் நேஷநல் வங்கியில் ரூ. 11000 கோடி மோசடியை கண்டறிந்தது புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி என்ற தகவல் கிடைத்துள்ளது.
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11000 கோடி மோசடியை அந்த வங்கியில் புதிதாக பொறுப்பேற்ற புதிய அதிகாரிதான் கண்டறிந்தாராம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக அனுப்பியுள்ளது. இதை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோசடி வழக்கில் பிரபல நகைக் கடை அதிபர் நிரவ் மோடிக்கு எதிராக இரு புகார்கள் எழுநதுள்ளன. இந்த முறைகேடுகள் கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகாரி ஓய்வு
இந்த விவகாரம் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது. வைர வியாபாரி நீரவ் மோடியின் நிறுவனம் புதிய கடனை கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பித்தது. அந்த நிறுவனத்துடன் வங்கியின் அதிகாரியும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு விட்டு பின்னர் அவர் ஓய்வு பெற்றது தெரியவந்தது.

29-ஆம் தேதி கடிதம்
இதையடுத்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அதிகாரி ஒருவர் இந்த மோசடி குறித்து சிபிஐக்கு கடந்த ஜனவரி 29-ஆம் தேதி கடிதம் எழுதினார். அதில் இரு வங்கி அதிகாரிகளின் பெயர்களை அந்த புதிய அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.

பயன்படுத்தவில்லை
வெளிநாட்டு வர்த்தகத்துக்கு பணம் செலுத்த வேண்டி ரூ. 280 கோடியை வைர வியாபாரி நீரவ் மோடி கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவற்றை அவர் கூறிய காரணங்களுக்காக பயன்படுத்தவில்லை. அதை எதற்கு பயன்படுத்தினார் என்பதற்கும் விவரங்கள் இல்லை என்று புதிய அதிகாரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீரவ் மோடியின் வீட்டுக்கு சீல்
நீரவ் மோடியின் நிறுவனத்துக்கு கடன் வரன்முறையே கிடையாது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து 30 வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீரவ் மோடியின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications