பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11000 கோடி மோசடியை கண்டறிந்தது புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி!
பஞ்சாப் நேஷநல் வங்கியில் ரூ. 11000 கோடி மோசடியை கண்டறிந்தது புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி என்ற தகவல் கிடைத்துள்ளது.
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11000 கோடி மோசடியை அந்த வங்கியில் புதிதாக பொறுப்பேற்ற புதிய அதிகாரிதான் கண்டறிந்தாராம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக அனுப்பியுள்ளது. இதை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோசடி வழக்கில் பிரபல நகைக் கடை அதிபர் நிரவ் மோடிக்கு எதிராக இரு புகார்கள் எழுநதுள்ளன. இந்த முறைகேடுகள் கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகாரி ஓய்வு
இந்த விவகாரம் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது. வைர வியாபாரி நீரவ் மோடியின் நிறுவனம் புதிய கடனை கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பித்தது. அந்த நிறுவனத்துடன் வங்கியின் அதிகாரியும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு விட்டு பின்னர் அவர் ஓய்வு பெற்றது தெரியவந்தது.

29-ஆம் தேதி கடிதம்
இதையடுத்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அதிகாரி ஒருவர் இந்த மோசடி குறித்து சிபிஐக்கு கடந்த ஜனவரி 29-ஆம் தேதி கடிதம் எழுதினார். அதில் இரு வங்கி அதிகாரிகளின் பெயர்களை அந்த புதிய அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.

பயன்படுத்தவில்லை
வெளிநாட்டு வர்த்தகத்துக்கு பணம் செலுத்த வேண்டி ரூ. 280 கோடியை வைர வியாபாரி நீரவ் மோடி கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவற்றை அவர் கூறிய காரணங்களுக்காக பயன்படுத்தவில்லை. அதை எதற்கு பயன்படுத்தினார் என்பதற்கும் விவரங்கள் இல்லை என்று புதிய அதிகாரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீரவ் மோடியின் வீட்டுக்கு சீல்
நீரவ் மோடியின் நிறுவனத்துக்கு கடன் வரன்முறையே கிடையாது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து 30 வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீரவ் மோடியின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications