சம்ஜாதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு… சாமியார் அசீமானந்த் உள்பட 4 பேரும் விடுதலை
பஞ்சகுலா:சம்ஜாதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சாமியார் அசீமானந்த் உள்பட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்று கொண்டிருந்த சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. அதில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். லாகூருக்கு சென்று கொண்டிருந்த அந்த ரயிலில் மொத்தம் 6 பெட்டிகளில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

ஆரம்பத்தில் இது பாகிஸ்தானின் சதி என்று மத்திய அரசு தெரிவித்தது. அதே போல, ஹைதராபாத்தின் மெக்கா வசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய சாமியார் அசிமானந்த்துக்கு, 68 பேரை பலி கொண்ட சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மெக்கா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு குண்டு வெடித்தது. அதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் தீவிர வாதிகள் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கில் சாமியார் அசீமானந்தா ஹரித்வாரில் வைத்து சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் தனக்குள்ள தொடர்பை அவர் ஒத்துக் கொண்டார். இது தொடர்பான வழக்கு பஞ்சகுலா கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அசீமானந்தா உள்பட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ராஜீந்தர் சவுத்ரி ஆகியோரையும் விடுவிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. குற்றம்சாட்டப் பட்டுள்ளவர்களுக்கு எதிராக குற்றத்தை சரிவர நிரூபிக்காததால் அவர்கள் விடுவிக்கப் படுவதாக நீதிமன்றம் கூறி இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications