உலுக்கும் சோகம்.. விழும் மரணங்கள்.. அதிர்ச்சிக்குள்ளாக்கும் காஷ்மீர்.. பீதியில் மக்கள்
ஸ்ரீநகர்: கொரோனா ஒருபக்கம் என்றால், தீவிரவாதிகள் தாக்குதலால் காஷ்மீர் நிலைகுலைந்து காணப்படுகிறது. நெஞ்சை பதற வைக்கும் வகையில் 3வயது பேரனின் கண் முன்னே தாத்தாவை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இன்று காலை ஜம்மு-காஷ்மீரின் சோப்பூர் நகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார். அவருடன் காரில் வந்த அவரது 3வயது பேரன் உயிர் பிழைத்தான். ரத்தம் சிதறிய தாத்தாவின் உடலின் அருகே சிறுவன் அமர்ந்து கதறி அழுத காட்சியுடன் கூடிய புகைப்படங்கள், காண்போரின் நெஞ்சை கனமாக்குகிறது.
ஸ்ரீநகரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் நகரில் சிஆர்பிஎப் ரோந்து குழுவை குறிவைத்து தீவிராவதிகள் சரமாரியாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். அப்போது 3வயது பேரனுடன் அவரது தாத்தா ஸ்ரீநகரில் இருந்து ஹண்ட்வாராவுக்கு மாருதி காரில் சென்று கொண்டிருந்தார். தீவிரவாதிகள் அவர்கள் மீதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.

சிஆர்பிஎப் வீரர் மரணம்
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த முதியவர் அங்கேயே பலியானார். தன் கண் முன்னே தாத்தா பலியானதை பார்த அவரது 3வயது பேரன் கதறி அழுதபடி இருந்தான். இதையடுத்து தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து சிறுவனை காப்பாற்ற சிஆர்பிஎஃப் வீரர்கள், தீவிரவாதிகளுடன் கடும் சண்டை போட்டனர். இதையடுத்து தீவிரவாதிகள் தப்பிஒடிவிட்டனர். தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் அடைந்தார். ஒரு முதியவர் உயிரிழந்தார். சுமார் ஐந்து வீரர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

பயந்து போன சிறுவன்
இந்நிலையில் குழந்தை தனது தாத்தாவின் ரத்தம் சிதறிய உடலின் அருகே உட்கார்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. சிறுவனை காப்பாற்றிய காவல்துறையினர், பத்திரமாக அழைத்துச் சென்ற போது சிறுவன் மிகவும் பயந்து போய் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். குழந்தையை ஒரு போலீஸ்காரர் பாதுகாப்பிற்கு கொண்டு செல்லும் புகைப்படத்தை காஷ்மீர் போலீசார் ட்வீட் செய்துள்ளனர்.

தீவிரவாதிகள் தாக்குதல்
கடந்த வாரம், அனந்த்நாக் நகரில் சிஆர்பிஎஃப் மீது பயங்கரவாத தாக்குதலின் போது ஆறு வயது சிறுவன் கொல்லப்பட்டான். லிட்டில் நிஹான் பட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக் கொண்டிருந்தபோது சிறுவனை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்துப் பணியில் இருந்த போது தீவிரவாதி ஒருவர் பைக்கில் சென்று துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

2 தீவிரவாதிகள் கொலை
குழந்தையின் கொலை பரவலான கோபத்தையும் கண்டனத்தையும் அப்போது எழுப்பியது. இதனிடையே அனந்த்நாக் தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் தீவிரவாதி பாதுகாப்பு படையினருடனான மோதலுக்கு பின்னர் நேற்று தப்பினார். அவருடன் ஒரு கிராமத்தில் மறைந்திருந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

மக்கள் பீதி
தீவிரவாதிகள் தாக்குதல் காஷ்மீரில் அண்மைக் காலமாக கடுமையாக அதிகரித்து வருகிறது. கொரோனாவின் தாக்கம் ஒருபக்கம் என்றால் மறுபக்கம் தீவிரவாதிகளின் அச்சுத்தல் காஷ்மீரை பீதிக்குள்ளாக்கி வருகிறது. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை முற்றிலும் ஒடுக்க வேண்டும் என்று அங்குள்ள மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications