இந்தியாவில் விடிய, விடிய நடந்த ஐபோன் விற்பனை.. 1 லட்சம் போன்களின் திடீர் விற்பனைக்கு காரணம் என்ன?
கொல்கத்தா: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்த பிறகு, தங்க நகை விற்பனை விறுவிறுவென நடந்தது. அதேபோல ஐபோன் விற்பனையும் விடிய விடிய நடந்துள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக 4 லட்சம் ஐபோன்களை இந்திய சந்தையில் கடந்த அக்டோபரில் களமிறக்கியது ஆப்பிள். இதில் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பிறகு மூன்று நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஐபோன்கள் விற்று தீர்ந்துள்ளன.

விடிய விடிய நடந்த வியாபாரத்தில், வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஸ்மார்ட்போன் டீலர்கள் கூட, ஐபோன் டீலர்களிடம் தங்களிடம் இருந்த பழைய நோட்டுக்கு ஐபோன்களை வாங்கி குவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக, தலைநகர் டெல்லி போன்ற இடங்களில் இந்த விற்பனை அபாரமாக இருந்துள்ளது.
இந்திய சந்தையில் சமீபத்திய வரவான ஐபோன் 7, ரூ.60,000 விலை கொண்டது. ஐபோன் 7 பிளஸ், ரூ.92,000 விலையாகும். இவை
இரண்டும் அதிக விலையுள்ளவை என்பதால் இவையே அதிகம் விற்பனையாகியுள்ளன.
சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த 8ம் தேதி இரவும் அதையடுத்து மூன்று நாட்களிலும் விற்பனையான ஐபோன்கள் பலவற்றுக்கு முன்தேதியிட்ட பில்கள் வழங்கப்பட்டுள்ளதாக, மொபைல் விற்பனையில் ஈடுபட்டுள்ள சிலர் தெரிவிக்கின்றனர்.
விற்பனை வேகத்தை பார்க்கும்போது, கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் அவற்றை ஐபோன் வாங்க பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஐபோன் விற்பனை உலகமெங்கும் மந்தமாக உள்ளது. ஆண்டிராய்டு போன்கள் வருகை, போலி ஐபோன்கள் வருகையால் நிலைமை இப்படியுள்ள நிலையில், திடீரென 1 லட்சம் போன்கள் விற்று தீர்ந்துள்ளது ஆச்சரியம் தருகிறது. கருப்பு பணத்தை எங்காவது சென்று கொட்டிவிட வேண்டும் என்று பலரும் முயற்சி செய்துள்ளது இவற்றின் மூலம் அம்பலமாகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications