ஆந்திராவில் லாரி கவிழ்ந்து 16 பேர் பரிதாப சாவு! 20 பேர் படுகாயம்.. டிரைவர் தூங்கியதால் விபரீதம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே லாரி கவிழ்ந்து அதில் பயணித்த 16 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் எலுரு என்ற பகுதியில் இருந்து விசாகபட்டணம் நோக்கி இன்று அதிகாலை லாரியொன்று சென்றுகொண்டிருந்தது. அதில் 30க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் பயணித்தனர். ராஜமுந்திரி நகரில் இருந்து சுமார் 33 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கண்டேபள்ளி என்ற பகுதியின் அருகே லாரி சென்றபோது, சாலையோர பள்ளத்தில் லாரி எதிர்பாராமல் கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே 16 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அனைவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

டிரைவர் தூங்கியபடி வாகனத்தை ஓட்டியதுதான் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. ஆந்திர நிதி அமைச்சர் எனமல ராமகிருஷ்ணுடு சம்பவ இடத்தை பார்வையிட்டார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

உள்துறை அமைச்சர் நிம்மகயலா சின்ன ராஜப்பாவும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்த மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+