நாகாலாந்து ஆளுநர் அஸ்வனிகுமார் ராஜினாமா!
டெல்லி: நாகாலாந்து மாநில ஆளுநர் அஸ்வனிகுமார் தமது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை பதவி விலகும்படி வலியுறுத்தினார்.

இதனால் உத்தரபிரதேச ஆளுநர் பி.எல்.ஜோஷி, சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சேகர் தத் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அத்துடன் நாகாலாந்து ஆளுநர் அஸ்வனிகுமாரும் தமது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் கேரள ஆளுநர் ஷீலா தீட்சித், கர்நாடகா ஆளுநர் பரத்வாஜ் ஆகியோர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர். மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் பதவி விலக கால அவகாசம் கோரியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை நாகாலாந்து ஆளுநர்அஸ்வினிகுமார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தற்போது நான் சிம்லா வந்துவிட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துவிட்டேன். இப்போதுதான் நிம்மதியாக இருப்பதாக உணருகிறேன் என்றார்.
யார் இந்த அஸ்வனி குமார்?
சி.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குனர் அஸ்வனி குமார். கடந்த 2013-ம் ஆண்டு நாகாலாந்து ஆளுநராக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டார்.
சி.பி.ஐ. இயக்குனராக அஸ்வனி குமார் பதவி வகித்தபோது, பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித் ஷாவை சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications