கொரோனா தடுப்பூசி போட விருப்பம் இல்லையா.. வீட்டுக்குள்ளேயே கிடங்க... ஒரு முதல்வர் பேசும் பேச்சா இது?
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
நாட்டில் கொரோனா 3-வது பல மாநிலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் ஓமிக்ரான் எனும் உருமாறிய வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

2 லட்சத்தை தாண்டிய பாதிப்பு
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டியதாக பதிவாகி உள்ளது. இதனால் நாட்டின் பல மாநிலங்களிலும் ஊரடங்குகள், முழு லாக்டவுன் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு நாட்களில் முக கவசம் அணியாதவர்கள், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

முதல்வர் பேச்சால் சர்ச்சை
இந்த நிலையில் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் நேற்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன. அதாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பமில்லாதவர்களை ஹோட்டல்கள், பொது இடங்கள், கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம். அப்படி தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் வீடுகளிலேயே இருக்கலாம் என்றார்.

வீட்டுக்குள் இருங்க
கடந்த வாரமும் ஹிமந்த பிஸ்வா இதேபோல் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ஜனவரி 16-ந் தேதி முதல் பொது இடங்களில் நடமாட அனுமதி இல்லை என கூறியிருந்தார். அஸ்ஸாமில் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களில் 767,253 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசிகள் இம்மாநிலத்தில் இதுவரை 56 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது.
Recommended Video

கொரோனா பாதிப்பு நிலவரம்
அஸ்ஸாமில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 653,717. அஸ்ஸாமில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 6,217. இம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 622,205. அஸ்ஸாமில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 23,948. அஸ்ஸாமில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications