மாணவிகளுடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட அசாம் ஆசிரியர்
மாணவிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அசாம் ஆசிரியர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் தன்னிடம் படிக்கும் சிறுமிகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை ஆசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்றும் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று ஆசிரியரை உயர்ந்த இடத்திலேயே நாம் வைத்துள்ளோம். நாம் கேட்பதை கொடுக்கும் கடவுளையும் ஆசிரியருக்கு அடுத்துதான் முக்கியத்துவத்தை வைத்து வரிசைப்படுத்தியுள்ளோம்.
அவ்வாறிருக்க, மாணவ, மாணவிகளை தங்கள் பிள்ளைகளை போல் கருத வேண்டிய ஆசிரியர்கள் பருவ வயதில் இருக்கும் சிறுமிகளை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது கலி முற்றிவிட்டது என்பதற்கான அறிகுறியை தவிர வேறென்ன சொல்வது.

அசாம் ஆசிரியர்
அசாம் மாநிலத்தில் ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள ஹைட்லிசேரா எனும் கிராமத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியர் ஃபெய்சுதீன் லஷ்கார். இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளுடன் வகுப்பறையில் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்துள்ளார்.

பேஸ்புக்கில் வெளியீடு
அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கைது செய்யவில்லை
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் கிராமமக்களும், பெற்றோரும் கடும் கோபத்தில் உள்ளனர்.

பள்ளி நிர்வாகமும்...
பள்ளி நிர்வாகம் சார்பில் ஆசிரியர் மீது நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் இந்த பிரச்சினைக் குறித்து அசாமில் உள்ள தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சிகளில் ஆசிரியர் ஒர் தொடர் குற்றவாளி என குறிப்பிடுகிறது.

வழக்குப் பதிவு
சமூக நடவடிக்கை மற்றும் உதவிக்கான குழந்தைகள் உரிமை தன்னார்வல அமைப்பு, அசாம் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து ஆசிரியர் மீதும், அந்த சர்ச்சைக்குரிய படத்தில் உள்ள மாணவியின் முகத்தை மறைக்காமல் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications