பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு ஜாமீன்
டெல்லி: பெங்களூர், தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் நாசிர் மதானிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு, பெங்களூரில் அடுத்தடுத்து பல பகுதிகளில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ஒரு பெண் பலியானார். 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புள்ளதாக, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துல் நாசிர் மதானி, கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், நீரிழிவு இருக்கிறது, கண்பார்வை குறைபாடு உள்ளது என்பதால், சிகிச்சை மேற்கொள்வதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி அப்துல் நாசிர் மதானி உச்சநீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் செலமேஸ்வர், சிக்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்திவந்தது.
விசாரணையின்போது, மதானிக்கு தேவையான சிகிச்சை அளிக்கும் வசதிகளை சிறைக்குள்ளேயே ஏற்பாடு செய்து தருகிறோம். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கர்நாடக அரசு வழக்கறிஞர் வாதாடினார்.
ஆனால், மதானிக்கு ஆதரவாக வாதாடிய மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், மதானி நீரிழிவு நோயால் அவதிப்படுகிறார். அவருக்கு சிறைக்குள்ளேயே சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமானது என்று வாதிட்டார். இதையடுத்து, மதானிக்கு, ஒரு மாதகாலம், ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் பெங்களூரைவிட்டு மதானி வேறு ஊருக்கு போகக்கூடாது என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. சாட்சியங்களை, மதானி தொடர்பு கொள்ள முடியாதபடி பார்த்துக்கொள்ளும்படி கர்நாடக அரசுக்கும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மதானி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை கர்நாடக அரசின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதன்பிறகு கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை தளர்த்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications