பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு ஜாமீன்
டெல்லி: பெங்களூர், தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் நாசிர் மதானிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு, பெங்களூரில் அடுத்தடுத்து பல பகுதிகளில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ஒரு பெண் பலியானார். 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புள்ளதாக, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துல் நாசிர் மதானி, கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், நீரிழிவு இருக்கிறது, கண்பார்வை குறைபாடு உள்ளது என்பதால், சிகிச்சை மேற்கொள்வதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி அப்துல் நாசிர் மதானி உச்சநீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் செலமேஸ்வர், சிக்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்திவந்தது.
விசாரணையின்போது, மதானிக்கு தேவையான சிகிச்சை அளிக்கும் வசதிகளை சிறைக்குள்ளேயே ஏற்பாடு செய்து தருகிறோம். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கர்நாடக அரசு வழக்கறிஞர் வாதாடினார்.
ஆனால், மதானிக்கு ஆதரவாக வாதாடிய மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், மதானி நீரிழிவு நோயால் அவதிப்படுகிறார். அவருக்கு சிறைக்குள்ளேயே சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமானது என்று வாதிட்டார். இதையடுத்து, மதானிக்கு, ஒரு மாதகாலம், ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் பெங்களூரைவிட்டு மதானி வேறு ஊருக்கு போகக்கூடாது என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. சாட்சியங்களை, மதானி தொடர்பு கொள்ள முடியாதபடி பார்த்துக்கொள்ளும்படி கர்நாடக அரசுக்கும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மதானி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை கர்நாடக அரசின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதன்பிறகு கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை தளர்த்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications