பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு ஜாமீன்
டெல்லி: பெங்களூர், தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் நாசிர் மதானிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு, பெங்களூரில் அடுத்தடுத்து பல பகுதிகளில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ஒரு பெண் பலியானார். 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புள்ளதாக, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துல் நாசிர் மதானி, கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், நீரிழிவு இருக்கிறது, கண்பார்வை குறைபாடு உள்ளது என்பதால், சிகிச்சை மேற்கொள்வதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி அப்துல் நாசிர் மதானி உச்சநீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் செலமேஸ்வர், சிக்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்திவந்தது.
விசாரணையின்போது, மதானிக்கு தேவையான சிகிச்சை அளிக்கும் வசதிகளை சிறைக்குள்ளேயே ஏற்பாடு செய்து தருகிறோம். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கர்நாடக அரசு வழக்கறிஞர் வாதாடினார்.
ஆனால், மதானிக்கு ஆதரவாக வாதாடிய மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், மதானி நீரிழிவு நோயால் அவதிப்படுகிறார். அவருக்கு சிறைக்குள்ளேயே சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமானது என்று வாதிட்டார். இதையடுத்து, மதானிக்கு, ஒரு மாதகாலம், ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் பெங்களூரைவிட்டு மதானி வேறு ஊருக்கு போகக்கூடாது என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. சாட்சியங்களை, மதானி தொடர்பு கொள்ள முடியாதபடி பார்த்துக்கொள்ளும்படி கர்நாடக அரசுக்கும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மதானி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை கர்நாடக அரசின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதன்பிறகு கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை தளர்த்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications