ஜூனியர் உலகக்கோப்பையை வென்று அசத்திய இந்தியா.. டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசு அறிவித்தது பிசிசிஐ!
ஜூனியர் உலக்ககோப்பையை வென்று அசத்தியுள்ள இந்திய அணிக்கு பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: ஜூனியர் உலக்ககோப்பையை வென்று அசத்தியுள்ள இந்திய அணிக்கு பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இதன் பைனல் மேட்ச்சில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின.
மவுன்ட் மாங்கானுவில் இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்குத் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 59 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

நெருக்கடி கொடுத்த இந்தியா
இந்திய அணியின் இஷான் பரோல் மற்றும் கமலேஷ் நகர்கோட்டி ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உப்பல் மற்றும் மெர்லோ ஜோடி ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்டது.
|
47 ஓவர்களில் ஆல் அவுட்
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடி மெர்லோ அரைசதம் அடித்தார். ஆனால், மெர்லோ 79 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. அந்த அணி 47.2 ஓவர்களில் 216 ரன்களில் ஆஸ்திரேலிய அணியை ஆட்டமிழக்கச் செய்தது.
|
வெற்றியை சுவைத்த இந்தியா
இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 38.5 ஓவர்களிலேயே இலக்கை அடைந்த இந்திய அணி வெற்றியை சுவைத்தது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றியை பெற்றது.
|
பிசிசிஐ பாராட்டு
ஜூனியர் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை நான்காவது முறையாக வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் அணிக்கு பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் பரிசையும் அறிவித்துள்ளது.
|
டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம்
இந்திய அணி ஜூனியர் உலகக்கோப்பையை கைப்பற்ற காரணமாயிருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பிசிசிஐ 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. அணிக வீரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாயும் அணியின் ஆதரவு ஊழியர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications